Digital Time and Date

Welcome Note

Saturday, June 2, 2012

പെട്രോള്‍ വില 2 രൂപ കുറച്ചു

ന്യൂഡല്‍ഹി • പെട്രോള്‍ വില ലീറ്ററിനു രണ്ടുരൂപ കുറയ്ക്കാന്‍ പൊതുമേഖല എണ്ണക്കന്പനികള്‍ തീരുമാനിച്ചു. വിലക്കുറവ് ഇന്ന് അര്‍ധരാത്രി മുതല്‍ പ്രാബല്യത്തില്‍ വരും.രാജ്യാന്തര എണ്ണ വിലയിലുണ്ടായ ഇടിവു കണക്കിലെടുത്താണ് തീരുമാനം.കഴിഞ്ഞ ആഴ്ച ആണ് പെട്രോളിനു ലീറ്ററിന് 7.54 രൂപ വര്‍ധിപ്പിച്ചത്. ചരിത്രത്തിലെ തന്നെ ഏറ്റവും വലിയ വില വര്‍ധനയായിരുന്നു ഇത്. വ്യാപക പ്രതിഷേധം ഉയര്‍ന്ന സാഹചര്യത്തില്‍ ക്രൂഡ് ഒായില്‍ വില കുറയുന്നതിന് അനുസരിച്ചു പെട്രോള്‍ വില കുറയ്ക്കുമെന്ന് എണ്ണക്കന്പനികള്‍ അറിയിച്ചിരുന്നു.

നെയ്‌യാറ്റിന്‍കരയില്‍ കനത്ത പോളിങ്; 80.7 %

നെയ്‌യാറ്റിന്‍കര• നെയ്‌യാറ്റിന്‍കര ഉപതിരഞ്ഞെടുപ്പില്‍ കനത്ത പോളിങ്. ഒൌദ്യോഗികമായി അനുവദിച്ചിരിക്കുന്ന സമയപരിധിയായ അഞ്ചുമണിവരെ 80.7 ശതമാനമാണ് പോളിങ് രേഖപ്പെടുത്തിയത്. മിക്ക ബൂത്തുകളിലും സമയപരിധികഴിഞ്ഞും വോട്ടര്‍മാരുടെ നീണ്ട നിരയുണ്ട്. ഇവര്‍ക്കും വോട്ട് രേഖപ്പെടുത്താന്‍ അവസരം നല്‍കും. 1960 ല്‍ രേഖപ്പെടുത്തിയ 84.39 ശതമാനമാണ്് നെയ്‌യാറ്റിന്‍കരയില്‍ ഇതുവരെ രേഖപ്പെടുത്തിയ ഏറ്റവും ഉയര്‍ന്ന പോളിങ്. ഏറ്റവും കുറവ് പോളിങ് രേഖപ്പെടുത്തിയത് 2006 ലാണ്. 66.06%.ഇക്കഴിഞ്ഞ തിരഞ്ഞെടുപ്പില്‍ 71.15 ശതമാനമായിരുന്നു ഇവിടെ പോളിങ്. മന്ദഗതിയില്‍ തുടങ്ങിയ പോളിങ് ഒന്‍പതരയോടെയാണ് കനത്തത്. 2011ല്‍ രാവിലെ ഒന്പതര വരെ 13.2 ശതമാനം രേഖപ്പെടുത്തിയപ്പോള്‍ ഇക്കുറി പോളിങ്   20.4 ശതമാനം രേഖപ്പെടുത്തി. 11.30 ആയപ്പോള്‍ 39.8 ശതമാനം പേര്‍ വോട്ടുചെയ്തു. 2011 ല്‍ ഇത് 29.6 ശതമാനമായിരുന്നു. ഉച്ചയ്ക്ക് ഒരു മണിയോടെ പോളിങ് 50 ശതമാനം കടന്നിരുന്നു. 2011ല്‍ ഇത് 42.9 ശതമാനമായിരുന്നു.ആദ്യമണിക്കൂറുകളില്‍ പുരുഷ വോട്ടര്‍മാരാണ് കൂടുതലായും പോളിങ് ബൂത്തുകളില്‍ എത്തിയത്. ഒറ്റപ്പെട്ട സ്ഥലങ്ങളില്‍   ചിലയിടങ്ങളില്‍ പോളിങ് യന്ത്രത്തിന്‍റെ തകരാര്‍മൂലം പോളിങ് വൈകിയതൊഴിച്ചാല്‍ മറ്റു പ്രശ്നങ്ങളുണ്ടായില്ല. തിരുപുറം പഞ്ചായത്തിലെ 96-ാം നന്പര്‍ ബൂത്ത്, കുളത്തൂരിലെ 104-ാം ബൂത്ത് എന്നിവിടങ്ങളില്‍ അല്‍പനേരം പോളിങ് തടസ്സപ്പെട്ടു. പതിനാറാം ബൂത്തില്‍ ബോര്‍ഡ് എടുത്തുമാറ്റുന്നതിനെചെ്ചാല്ലി എല്‍ഡിഎഫ്  -യുഡിഎഫ് തര്‍ക്കമുണ്ടായി. പോളിങ് ഉദ്യോഗസ്ഥര്‍ ഇടപെട്ട് ബോര്‍ഡുകള്‍ എടുത്തു മാറ്റി തര്‍ക്കം പരിഹരിച്ചു.ശാസ്താംതല സ്കൂളിലെ ബൂത്തിലും എല്‍ഡിഎഫ് -യുഡിഎഫ് സംഘര്‍ഷം ഉണ്ടായി. ബൂത്തിനുള്ളില്‍ എല്‍ഡിഎഫ് പ്രവര്‍ത്തകര്‍ വോട്ടര്‍മാരെ സ്വാധീനിക്കാന്‍ ശ്രമിചെ്ചന്ന് യുഡിഎഫ് പ്രവര്‍ത്തകര്‍ ആരോപിച്ചതിനെ തുടര്‍ന്നായിരുന്നു സംഘര്‍ഷം.

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்


*#06# – அனைத்து மொபைலுக்கு ம் IMEI எண் பார்க்க
*#0000# – தயாரிப்பு தேதி பார்க்க
#*2472# – தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய
*#7780# – பேக்டரி அமைப்பை கொண்டுவர
*8375# – மொபைல் போனில் உள்ள சாப்ட்வேர் தொகுப்பின் பதிப்பு எண் என்று அறிய
*#9999# – தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்களை அறிய
*#0001# – போனின் சீரியல் எண்ணை காண
*#8999*778 # – சிம் கார்ட் பற்றிய தகவல்களை அறிய
#*#8377466 # – போனின் ஹாட்வேரின் தன்மை மற்றும் தயாரிப்பு அறிய
*#67705646 # – clears the LCD display(op erator logo).
*#147# – This lets youknow who called you last (Only vodofone).
*#1471# – Last call (Only vodofone).
#pw+123456 7890+1# –Provider Lock Status.
#pw+123456 7890+2# –Network Lock Status.
#pw+123456 7890+3# –Country Lock Status.
#pw+123456 7890+4# –SIM Card Lock Status.
*#21# – This phone code allows you to check the number that “All
Calls” are diverted to.
*#2640# – Displays phone security code in use.
*#30# – Lets you see the private number.
*#2820# – ப்ளுடுத் முகவரி பார்க்க
2945*#01*# – எல்ஜி போனின் ரகசிய மெனுவினைக் கொண்டு வர
2945#*7000 1# – போன்களின் (எல்ஜி 7010 மற்றும் 7020) சிம் கார்ட்
லாக்கினை மேனேஜ் செய்திட
1945#*5101 # – எல்.ஜி. பி 1200 போனின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
2945#*5101 # – எல்.ஜி. பி 5200 மற்றும் 510 டபிள்யூ போன்களின் சிம் லாக்
மெனு மேனேஜ் செய்திட
2947#* – எல்.ஜி. 500 மற்றும் 600 போன்களின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
#*3849# – சாம்சங் மொபைல் போனை மீண்டும் Reboot செய்ய
*#62209526 # – Displaythe WLAN adapter’s MAC Address. It is available
only for newer devices which support WLAN such as N80.
*#74602562 5# – Sim clock allowed status.
#pw+123456 7890+1# –Displays any restrictio ns that your sim has.
*#92702689 # – Takes you to a secret menu where you may find some of
the informatio n below:
1. Shows the Serial Number.
2. Shows the Month andYear of your mobile Manufactur e.
3. Shows the date at which the mobile was purchased (MMYY).
4. Shows the life time of your mobile (time passed since last restart).
5. Shows the date at which your mobile was last repaired – if found (0000)
To exit from this mode,simply switch off and then switch on your mobile phone.
*#3370# – Enhanced Full Rate Codec (EFR) activation .
- This enables your mobile to work with increased signal strength, use
better signal reception.
- This also helps you increase your GPRS speed to some extent.
- It has drawback that your phone battery will be consumed
*#3370* – Enhanced FullRate Codec (EFR) deactivati on. Phone will be
automatica lly restarted automatica lly.Your battery life will
increase by 30% but, phone will received less signal than with EFR
activated.
*#4720# – used to activate Half Rate Codec. Your phone uses a lower
quality sound but you should gain approx 30% more Talk Time.
*#4720* – used to deactivate Half Rate Codec. The phone will
berestarted automatica lly.
If you have forgotten wallet code for your Nokia S60 phone, you can
use this code reset:*#73709255 38#
Note, your data in the wallet will be erased. You will be asked the
lock code. Default lock code is: 12345
*#3925538# – used to delete the contents andcode of wallet.

இக்காலத்தில் நம்மை பிரமிக்க வைக்கும் நபர் நிக் வூயிசிச் (Nick Vujicic).


இக்காலத்தில் நம்மை பிரமிக்க வைக்கும்  நபர் நிக் வூயிசிச் (Nick Vujicic).

1982 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் மெல்போர்னில் பிறந்த இவருக்குப் பிறந்த போதே கைகளில்லை, கால்களுமில்லை. இப்படிப் பிறந்த ஒருவர் வாழ்ந்து என்ன தான் செய்து விட முடியும் என்று எல்லோருக்கும் நினைக்கத் தோன்றும்.

அவர் நடப்பார், நீந்துவார், விளையாடுவார், எழுதுவார் என்றெல்லாம் சொன்னால் அது கற்பனைக்கும் எட்டாத பொய் என்று தானே நினைக்கத் தோன்றும். ஆனால் இன்றும் அதை எல்லாம் செய்து காட்டுகிறார் அவர் என்பது தான் அதிசயிக்க வைக்கும் உண்மை.


அவருக்கு இடது கால் இருக்க வேண்டிய இடத்தில் இருக்கும் ஆறாம் விரல் போன்றதொரு பாகம் தான் அவரால் இயக்க முடிந்த ஒரு பாகம்.

பள்ளியில் படிக்கச் சென்ற அவரை அனைவரும் ஏளனமாகவும், வேற்றுக்கிரகவாசி போலவும் பார்ப்பது அவருக்கு மிகுந்த வேதனையைத் தந்தது.

13 வயது வரை அவர் சதா தற்கொலை சிந்தனைகளிலேயே இருந்தார்.

ஆனால் தற்கொலைக்குக் கூட அடுத்தவர் உதவ வேண்டி இருந்த பரிதாப நிலை அவருடையது.


அவருடைய 13ஆம் வயதில் ஒரு பத்திரிக்கையில் மிக மோசமாக உடல் ஊனமுற்ற ஒரு மனிதர் அதையும் மீறி செய்த அற்புத செயல்களைப் பற்றி எழுதியிருந்ததைப் படித்தார்.

படிக்கையில் அவருக்குள் ஒரு மின்னல் அடித்தது.

அந்த செய்தி பெரியதோர் மாற்றத்தை அவர் வாழ்க்கையில் ஏற்படுத்தியது.

தளராத மனத்துடன் ஒவ்வொரு புதிய செயலையும் தேர்ந்தெடுத்துக் கற்றுக் கொண்டார்.

கம்ப்யூட்டர் இயக்குவது முதல் டென்னிஸ் விளையாடுவது வரை கற்றுக் கொண்டு தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

பல நாடுகளுக்குச் சென்று தன்னம்பிக்கை ஊட்டும் சொற்பொழிவுகள் ஆற்றும் நிகழ்த்தி வரும் இவர், உடல் ஊனமுற்றவர்களுக்காக லைஃப் வித்தவுட் லிம்ப்ஸ் (Life Without Limbs) என்ற ஒரு அமைப்பை நிறுவி அவர்களுக்கு உதவி வருகிறார்.


{கைகள், கால்கள் மற்றும் உடலமைப்பு அனைத்தும் நல்லவிதமாக அமைந்து "தன்னம்பிக்கை" இல்லாமல் வாழும் மனிதர்களுக்கு இவர் ஒரு உதாரணம்.}

Friday, June 1, 2012

அர்ஷின் கீழ் நிழல் பெறும் அந்த ஏழு கூட்டத்தினர்




 
அல்லாஹ்வின் நிழலைத்தவிர வேறு எந்த நிழலுமே இல்லாத நாளில் அல்லாஹ் ஏழு கூட்டத்தாருக்கு மட்டும் அர்ஷின் நிழலில் நிழல் கொடுப்பான்.

1.நீதியான அரசன்,

2.அல்லாஹ்வின் வணக்கத்தில் திளைத்த (ஊரி திளைத்த) வாலிபன்,

3.பள்ளியோடு உள்ளம் தொடர்புள்ள மனிதன்,

4.இருவர் அல்லாஹ்விற்காக நேசித்து ஒன்றிணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிந்தவர்கள்,

5.நல்ல குடும்பத்தைச் சேர்ந்த ஒரு அழகி ஒருவரை விபச்சாரத்திற்காக அழைத்தும் நான் அல்லாஹ்வை பயப்படுகின்றேன் என்று கூறிய(ஒதுங்கிக் கொண்ட)வர்,

6.வலது கரம் கொடுக்கும் தர்மத்தை இடது கரத்திற்கு தெரியாமல் மறைமுகமாக தர்மம் கொடுத்தவர்,

7.தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்து (அழுது) கண்களால் கண்ணீர் வடித்தவர்

என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

குறிப்பு: மேல் கூறப்பட்ட தன்மையுள்ளவர்கள் ஈமானில் முழுமை அடைந்தவர்களால் மாத்திரமே முடியும், ஆகவே நாமும் அப்பண்புள்ளவர்களாக வாழ முயற்சிப்போமாக.

மஹ்ஷர் வெளியின் அகோரம்
மஹ்ஷர் வெளியென்பது கேள்வி கணக்கு கேட்கப்படும் நாளாகும். அங்கே சூரியன் மனிதர்களுக்கு ஒரு மயில் தூரத்தில் நெருங்கியிருக்கும், மனிதர்கள் ஆடையில்லாதவர்களாக, செருப்பில்லாதவர்களாக, அவரவர் செய்த பாவத்திற்கிணங்க,வேர்வையில் மூழ்கியவர்களாக இருப்பார்கள்.

பின்வரும் ஹதீதுகள் அதை தெளிவு படுத்துகின்றது,

சூரியன் மனிதர்களுக்கு ஒரு மயில் அளவு நெருங்கி விடும், மனிதர்கள் செய்த தவறளவுக்கு வேர்வை அவர்களை அடைந்துவிடும், சிலருக்கு அவர்களின் கரண்டை அளவுக்கும், சிலருக்கு அவர்களின் முட்டுக்கால் வரையிலும், சிலருக்கு அவர்களின் இடுப்புவரையிலும், சிலருக்கு வாய்வரையிலும் வந்துவிடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

பூமியில் எழுபது முழம் செல்லும் அளவு மறுமையில் மனிதர்களுக்கு வேர்வை ஏற்படும், அவர்களின் வேர்வை அவர்கள் காதுவரை மூடிவிடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

தன் வாழ்நாளை எப்படி கழித்தார், தான் கற்ற அறிவைக் கொண்டு என்ன செய்தார், தன் பணத்தை எங்கிரிந்து சம்பாதித்தார் இன்னும் எப்படி செலவளித்தார், தன் உடம்பை எதில் அற்பணித்தார் என்ற, நான்கு கேள்விகள் கேட்கப்படும் வரை நாளை மறுமையில் ஒரு அடியானின் இரு கால் பாதங்களும் (அவர் நிற்கும் இடத்தை விட்டும்) நகராது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(திர்மிதி)

இவ்வளவு இக்கட்டான சூழலில்தான் ஏழு கூட்டத்திற்கு மட்டும் தன் அர்ஷின் நிழலில் அல்லாஹ் நிழல் கொடுப்பான், அக்கூட்டத்தின் தன்மைகளை கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.


1. நீதியான அரசன்:

அல்லாஹ் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்:

நம்பி உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்புவித்து விடவேண்டுமென்றும், மனிதர்களிடையே தீர்ப்பு கூறினால் நியாயமாகவே தீர்ப்புக் கூறுதல் வேண்டும் என்றும் உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் கட்டளையிடுகிறான்;. நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு (இதில்) மிகவும் சிறந்த உபதேசம் செய்கிறான்;. நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான். 4:58.

மக்கா வெற்றிபெற்ற போது உத்மான் இப்னு மள்ஊன் (ரலி) அவர்களிடம் இருந்த கஃபத்துல்லாவின் சாவியை நபி (ஸல்) அவர்கள், அவர்களிடமிருந்து எடுத்திருந்தார்கள், கஃபத்துல்லாவிலிருந்து வெளியில் வரும் போது மேல்கூறப்பட்ட ஆயத்தை ஓதியவாறு உத்மான் இப்னு மள்ஊன் (ரலி) அவர்களை அழைத்து அச்சாவியை அவர்களிடமே ஒப்படைத்து விட்டார்கள். இந்த ஆயத்திலே அல்லாஹ் அமானிதங்களை உரியவர்களிடம் ஒப்படைக்குமாறும் மக்களுக்கு மத்தியில் தீர்ப்பு வழங்கினால் நீதமான முறையில் தீர்ப்பு வழங்குமாறும் நபி (ஸல்) அவர்களுக்கு கட்டளையிடுகின்றான்.
நீதமென்பது: தனக்கு சாதகமாக இருந்தாலும் பாதகமாக இருந்தாலும் நீதி தவறக்கூடாது, தீர்ப்பு வழங்குபவர் ஆண்டியாக இருந்தாலும் சரி அரசனாக இருந்தாலும் சரியே, நபி (ஸல்) அவர்கள் இந்த ஹதீதில் நீதியான அரசன் என்று கூறியதற்கு காரணம், அரசனாக இருந்தும் நீதி தவறாமல் இருப்பது ஈமானின் முழுமைக்கு அடையாளமாகும் என்பதற்காகத்தான், குறைவான ஈமான் உள்ளவர் அரச பதவியில் இருக்கும் போது நீதியாக தீர்ப்பளிக்கமாட்டார் இன்றைய உலகத்தின் நடைமுறைகள் அதற்கு சான்றாக இருக்கின்றது.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், தனது தீர்ப்பிலும் தனது குடும்பத்திலும் அவர்கள் பொறுப்பேற்றவைகளிலும் அல்லாஹ்விடத்தில் நீதம் செலுத்துபவர்கள் கண்ணியத்திற்குரிய அர்ரஹ்மானின் வலது புறத்திலிருக்கும் ஒளியிலான மிம்பர் மேடையில் வீற்றிருப்பார்கள், அல்லாஹ்வின் இரு கரங்களும் வலதுபுறத்திலுள்ளவையாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)


2. அல்லாஹ்வின் வணக்கவழிபாட்டில் உருவான
வாலிபன்

வாலிப வயது என்பது, மனிதன் தன் வாழ்வில் பெறும் மிக முக்கிய கட்டமாகும். அந்த வயதில் மனிதன் சகல உடல் ஆரோக்கியத்தையும் பெற்று கம்பீரமாக வாழும் வயதாகும். அந்த வயதில்தான் மனிதனின் உடல் நல்ல ஆரோக்கியத்தை பெற்று சுறுசுறுப்பாக வாழும் வயதாகும். எதையும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உருவாகும் வயதாகும். அதுவும் இந்த காலத்தைப்பற்றி கூறத்தேவையில்லை. இப்படிப்பட்ட பல எண்ணங்கள் உருவாகும் வயதிலும் அல்லாஹ்வைக்கு அடிபணிந்து நடக்கும் வாலிபனும் அந்த அர்ஷின் நிழலில் வீற்றிருப்பான். தங்களின் ஈமானை பாதுகாத்துக் கொள்வதற்காக குகைக்கு சென்ற வாலிபர்களை பற்றி அல்லாஹ் திருமறையில் புகழ்ந்து கூறுகின்றான்.

(அஸ்ஹாபுல் கஹ்ஃபு என்ற குகையிலிருந்தோரைப் பற்றி) அந்த குகையிலிருந்தோரும், சாஸனத்தையுடையோரும் நம்முடைய ஆச்சரியமான அத்தாட்சிகளில் நின்றும் உள்ளவர்கள் என எண்ணுகிறாரோ, அந்த இளைஞர்கள் குகையினுள் தஞ்சம் புகுந்த போது அவர்கள் ”எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக! இன்னும் நீ எங்களுக்கு எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாக)ச் சீர்திருத்தித் தருவாயாக!” என்று கூறினார்கள். ஆகவே நாம் அவர்களை எண்ணப்பட்ட பல ஆண்டுகள் வரை அக்குகையில் (தூங்குமாறு) அவர்களுடைய காதுகளின் மீது (திரையிட்டுத்) தடையேற்படுத்தினோம். பின்பு, (அக்குகையில் தங்கியிருந்த) இருபிரிவினர்களில் எப்பிரிவினர், தாங்கள் (குகையில்) தங்கியிருந்த கால அளவை நன்கு அறிந்திருந்தார்கள் என்பதைச் சோதிப்பதற்காக அவர்களை நாம் எழுப்பினோம். (நபியே!) நாம் உமக்கு அவர்களுடைய வரலாற்றை உண்மையைக் கொண்டு அறிவிக்கிறோம்; நிச்சயமாக அவர்கள் இளைஞர்கள் – தங்கள் இறைவன் மீது ஈமான் கொண்டார்கள்; இன்னும் நாம் அவர்களை நேர் வழியில் அதிகப்படுத்தினோம். 18:9-13

இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் இதற்கு முக்கியத்துவம் கொடுத்து கூறினார்கள். ஐந்துக்கு முன் ஐந்தை பயன்படுத்தி கொள்ளுங்கள், உன்னுடைய வயோதிபத்துக்கு முன் உன் வாலிபத்தையும், நீ வேலையுள்ளவராக ஆகுவதற்கு முன் உன் ஓய்வையும், உன்னுடைய மரணத்திற்க்கு முன் உன் வாழ்வையும், உன்னுடைய நோய்க்கு முன் உன் ஆரோக்கியத்தையும், உன்னுடைய வறுமைக்கு முன் உன்னுடைய செல்வத்தையும் (மறுமைக்காக) பயன்படுத்திக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்தத்ரகுல் ஹாகிம்) இந்த ஹதீதிலும் வாலிபம் இடம் பெற்றிருப்பது வாலிப வயதின் முக்கியத்துவத்தை காட்டுகின்றது.


3. பள்ளியோடு நெருங்கிய தொடர்புடைய மனிதர்


பள்ளிக்குள் இருப்பதில் அமைதி பெறுபவர் ஒரு உண்மையான முஃமின். மனிதன் என்பவன் உலகத்தேவைகள் உள்ளவன், அவனுக்கு குடும்பம் என்றும் தொழில் என்றும் பல உலகத்தேவைகள் இருக்கின்றது. பள்ளிக்குள்ளேயே தனது வாழ்நாளை கழிக்கமுடியாது என்பதால், பள்ளிக்குள் வந்த அந்த மனிதன் தனது உலக வாழ்க்கைத் தேவைக்காக வெளியில் செல்லத்தான் வேண்டும். பள்ளியிலிருந்து வெளியில் சென்றதும் மீண்டும் பள்ளிக்குள் வந்து அந்த ஈமானிய அமைதியை எப்போது பெறுவதென்றே எண்ணிக் கொண்டிருப்பார். தண்ணீரிலிருந்து எடுக்கப்பட்ட மீன் மீண்டும் தண்ணீருக்குள் செல்வதற்கு துடிப்பது போல், பள்ளியிலிருந்து உலகத் தேவைக்காக வெளியில் சென்ற முஃமின் மீண்டும் பள்ளிக்குள் வருவதற்கு ஆசைப்படுவான். இது ஒரு உண்மையான முஃமினைத்தவிர வேறு யாரிடமும் இருக்க முடியாது. உண்மையான முஃமின் அல்லாதவர், கூட்டில் அடைக்கப்பட்ட பறவை போன்று பள்ளிக்குள் இருப்பார், கூட்டில் அடைக்கப்பட்ட பறவை, தன்னை எப்போது திறந்து விடுவார்கள், பறந்து விடலாம் என்றுதான் பார்த்துக் கொண்டிருக்கும். அவ்வாறே உண்மையான முஃமின் அல்லாதவரும் பள்ளிக்குள் தொழுகைக்கு வந்ததும், இமாம் சின்ன சூரா ஓதமாட்டாரா என்று நினைப்பதும், எப்போது ஸலாம் கொடுத்து தொழுகையை முடிப்பார் என்று எதிர்பார்த்திரிந்து இமாம் தொழுகையை முடித்ததும், பள்ளிக்குள் ஏதோ விபத்து நடந்து விட்டது போன்று அவசர அவசரமாக பள்ளியை விட்டும் வெளியேறிச் சென்றுவிடுவார்கள்.

இமாம் தொழுகையை முடித்ததும், பள்ளிக்குள் ஏதோ விபத்து நடந்து விட்டது போன்று அவசர அவசரமாக பள்ளியை விட்டும் வெளியேறிச் சென்றுவிடுவார்கள். இப்படி செய்வதை வழமையாக்கிக் கொண்டவர்கள் இதைமாற்றி அமைக்க வேண்டும். பர்ளான தொழுகை முடிந்ததும் அதற்குப்பிறகு ஓதக்கூடிய அத்காருகளை ஓதி முடித்த பின், சுன்னதுக்களைத் தொழுது

அல்லாஹ்விடத்தில் தன் தேவைகளைக் கேட்டு, அங்கு
மார்க்க உரைகள் செய்யப்பட்டால் அதில் கலந்து கொள்வதோடு திருமறை குர்ஆனை ஓதும் வழக்கத்தையும் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இப்படி, பள்ளியில் அமர்ந்து அமைதியை பெறுவார் உண்மையான முஃமின்.

பள்ளிக்குச் செல்லும்போதெல்லாம் அவருக்காக சுவர்க்கத்தில் ஒரு இடம் தயார் செய்யப்படுகின்றது.
யார் காலையிலோ அல்லது மாலையிலோ பள்ளிக்குச் செல்கின்றாரோ அவருக்காக காலையிலும் மாலையிலும் பள்ளிக்குச் செல்லும் போதெல்லாம் சுவர்க்கத்தில் அவருக்காக ஒரு இடம் தயார் செய்யப்படுகின்றது என
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)


4. இருவர் அல்லாஹ்விற்காகவே நேசித்து ஒன்று சேர்ந்து,
அல்லாஹ்விற்காகவே பிரிந்தவர்கள்

இன்று மனிதர்களில் அதிகமானவர்கள் ஒருவரை நேசிப்பதும் கோபிப்பதும் உலகத்தை மையமாக வைத்தே. ஒருவரால் ஏதும் கிடைக்குமென்றிருந்தால் அவருடன் நேசிப்பார்கள், அது கிடைக்கவில்லையெனில் அந்த நேசத்தை முடித்துக் கொள்வார்கள். ஆனால் ஒரு முஃமின் அப்படி இருக்கமாட்டார். அவர் ஒருவரை நேசிப்பதும் கோபிப்பதும் அல்லாஹ்விற்காகவே இருக்கும். ஒரு மனிதன் மார்க்கத்தை பின்பற்றி நடக்கின்றார் என்பதை பார்க்கும் போது அவரை நிச்சயமாக ஒரு முஃமின் நேசிப்பான், அவர் இவருடைய சொந்தக்காரராக இருந்தாலும் சரி, அல்லது சொந்தம் இல்லாதவராக இருந்தாலும் சரியே, அதே நேரத்தில் அவரிடத்தில் இஸ்லாத்திற்கு மாற்றமான பண்புகளை பார்க்கும் போது அவரை வெறுக்கவும் செய்வார் இதுவே ஒரு உண்மையான முஃமினின் பண்பாகும்.

யார் அல்லாஹ்விற்காக நேசித்தும் கோபித்தும் இன்னும் அல்லாஹ்விற்காக கொடுக்கவும் தடுக்கவும் செய்கின்றாரோ அவர் ஈமானை முழுமையாக்கிக் கொண்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்)


5. நல்ல குடும்பத்தைச் சேர்ந்த ஒரு அழகி ஒருவரை விபச்சாரத்திற்காக அழைத்தும் நான் அல்லாஹ்வை பயப்படுகின்றேன் என்று கூறியவர்(ஒதுங்கிக் கொண்டவர்)

காளி இயாள் (ரஹ்) அவர்கள், இந்த ஹதீதிற்கு விளக்கம் அளிக்கும் போது, எந்த ஒரு ஆணும் அழகுள்ள நல்ல குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ய விரும்புவார்கள், அது இயற்கையும் கூட, அப்படிப்பட்ட பெண்களை அடைவதற்கு பல சிரமங்களை மேற்கொள்ள வேண்டிவரும். ஆனால் எந்த ஒரு சிரமமுமின்றி அப்படிப்பட்ட பெண்ணே அழைக்கும் போது, அவளிடமிருந்து ஒதுங்கிக் கொள்பவரும் அந்த ஏழு கூட்டத்தில் அடங்குவார். இதை ஒரு முழுமையான முஃமினைத்தவிர வேறு யாரும் செய்யமுடியாது. முழுமையான முஃமின் அல்லாதவர் இதை அரிய சந்தர்ப்பமாக? கருதி அந்த பெண்ணுடன் இன்பம் அனுபவித்து விடுவார். இன்று முஸ்லிம்களில் பலர், ஆபாச சேனல்கள், பிலிம்கள் சீடிக்களின் மூலம் உல்லாசமாக? வலம் வருகின்றார்கள், அதை அரிய வாய்ப்பாகவும் கருதுகின்றார்கள். இப்படிப்பட்டவர்கள் இந்த ஹதீதை ஞாபகம் வைத்துக் கொள்ளட்டும். அன்னிய பெண்கள் விஷயத்தில் ஒரு முஃமின் அல்லாஹ்வை பயந்து கொள்ள வேண்டும். அது நேரடியாக இருந்தாலும் சரி அல்லது பிலிமாக போட்டாவாக இருந்தாலும் சரியே.
அதிகமான ஆண்கள் பெண்கள் மூலமே தவறில் வீழ்ந்து விடுகின்றார்கள்.

எனக்குப் பின் ஆண்கள் மீது மிகவும் ஆபத்தான குழப்பம் தரக்கூடிய ஒன்றாக பெண்களைத் தவிர வேறு எதையும் நான் விட்டுச்செல்லவில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

குகையில் நுழைந்த மூவரின் சம்பவத்தையும் வாசகர்கள் நினைவில் கொண்டுவருவது பொருத்தமாக இருக்கும்.
ஆகவே பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சி நடப்போமாக!

பிலிம்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வதும் குறிப்பாக ஆபாச பிலிம்கள் மற்றும் மொபைல் மூலம் ஒருவருக்கொருவர் ஆபாசப்படங்களை அனுப்பி வைப்பதும் இன்று மிக அதிகரித்துவரும் காலமாகும். இதனால் வழிகெட்டுப் போகின்றவர்களுக்கு கிடைக்கும் பாவத்தில் இவருக்கும் ஒரு பங்கு உண்டு என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளட்டும். இப்படிப்பட்டவர்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ளட்டும், இப்படிப்பட்ட அனாச்சாரத்தில் நமது சமூகம் மூழ்கியிருப்பது மனவேதனையையும் தலைகுனிவையும் ஏற்படுத்துகின்றது.


6. வலது கரம் கொடுக்கும் தர்மத்தை இடது கரத்திற்கு
தெரியாமல் மறைமுகமாக தர்மம் கொடுத்தவர்

இடது கை கொடுக்கும் தர்மத்தை வலது கை தெரியாமல் கொடுப்பதென்பதின் கருத்து, உள்ளத் தூய்மையுடன் தர்மத்தை கொடுப்பதென்பதாகும்.

மறைமுகமாக செய்யும் தர்மம் இறைவனின் கோபத்தை அணைத்துவிடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஃஜமுஸ்ஸகீர், தப்ரானி)

இங்கு தர்மத்தை குறிப்பாக சொல்லப்பட்டிருந்தாலும் எல்லா அமல்களையும் உள்ளத் தூய்மையுடன் செய்யவேண்டும் என்பதை இது குறிக்கின்றது. அமல்களை குறைவாக செய்தாலும் அல்லாஹ்விற்காக செய்ய வேண்டும். அதுவே அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்படும்.


7. தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்து (அழுது) கண்களால் கண்ணீர் வடித்தவர்

ஆதமுடைய மக்கள் அனைவரும் தவறு செய்பவர்கள், தவறு செய்தவர்களில் சிறந்தவர்கள் பாவமன்னிப்பு தேடுபவர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஃஜமுஸ்ஸகீர், தப்ரானி)

பாவமன்னிப்பு ஏற்றுக்கொள்ளப்படுவதற்குரிய நிபந்தனைகளில் ஒன்று, தான் செய்த பாவத்தை நினைத்து கவலைப்பட்டு அதற்காக கண்ணீர் வடிப்பது.
இங்கு உண்மையான தவ்பாவின் நிபந்தனைகளை ஞாபகமூட்டுவது பொருத்தமாக இருக்கும், அவைகள் பின்வருமாறு.

ஏற்றுக் கொள்ளப்படும் தவ்பாவின் நிபந்தனைகள்
பிழை பொறுப்பு தேடுபவரிடம் இருக்க வேண்டிய நிபந்தனைகள்,
1. உள்ளத் தூய்மையுடன் பிழை பொறுப்பு தேடவேண்டும்.
2. செய்த பாவங்களை முற்றாக விட்டுவிட வேண்டும்.
3. அதற்காக கவலைப்பட வேண்டும்.
4. இனிமேல் அத்தவறை செய்யமாட்டேன் என அல்லாஹ்விடம் உறுதி மொழி கொடுக்க வேண்டும்.
5. மரணத்திற்கு முன் பாவமன்னிப்பை செய்ய வேண்டும், மரண நேரத்தில் செய்யப்படும் பாவமன்னிப்பை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான். (இவைகள் அல்லாஹ்விற்கும் அடியானுக்கும் மத்தியில் நிகழ்ந்த பாவங்களுக்கான நிபந்தனைகளாகும்)
6. அடியார்களுக்கு செய்த தவறாயின், அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், அது ஒரு பொருளாக இருந்தால் உரியவரிடம் திருப்பி கொடுத்திட வேண்டும். இவைகள் ஏற்றுக்கொள்ளப்படும் பிழைபொறுப்பின் நிபந்தனைகளாகும்.

நாம் செய்த பாவங்களை நினைத்து, அழுது புலம்பி அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்பதால் நம்மை நரகமே தீண்டாது.

அல்லாஹ்வின் பயத்தால் அழுத கண், அல்லாஹ்வின் பாதையில் விழித்திருந்து பாதுகாத்த கண் (இவ்விரு கண்களையும்) நரகம் தீண்டாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)

நபி (ஸல்) அவர்களும் முன் சென்ற நல்லவர்களும்
அல்லாஹ்வின் பயத்தால் அதிகம் அழக்கூடியவர்களாக இருந்திருக்கின்றார்கள்.

நாம் செய்த பாவங்களை நினைத்து, அல்லாஹ்விடம் அழுவோமாக!

அன்புள்ள சகோதர சகோதரிகளே! மேல் கூறப்பட்ட ஏழு கூட்டத்தவர்களின் பண்புகளை நாமும் பெற்றவர்களாகவே வாழ்ந்து மரணிக்க வேண்டும் என்று முடிவெடுங்கள். அல்லாஹ் நிச்சயம் உதவி செய்வான். அதற்கு முடியாத பட்சத்தில் ஒரு கூட்டத்திலாவது நம்மை நாம் இணைத்துக் கொள்ள வேண்டும். அல்லாஹ் நம் அனைவருக்கும் அதற்கு வாய்ப்பளிப்பானாக!

மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ

ஜும்மா தினத்தன்று (துஆ அங்கீகரிக்கப்படும்) அந்நேரம் பற்றிய பாடம்.



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹு...

ஜும்மா தினத்தன்று (துஆ அங்கீகரிக்கப்படும்) அந்நேரம் பற்றிய பாடம்.

ஸஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண் : 401
“நிச்சயமாக ‘ஜும்ஆ‘வில் (ஜும்ஆ நாளில்) ஒரு நேரமுண்டு, அந்நேரத்திற்கு ஒரு முஸ்லிம் தொழுகையிலிருக்க1 அதை அவருக்கு அல்லாஹ் தந்ததை தவிர எந்த நன்மையையும் அவர் அல்லாஹ்விடம் கேட்பதில்லை” என அபுல் காஸிம்ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாகஅபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள்.தனது கையினால் அந்நேரத்தை குறைத்து அர்ப்ப சொர்ப்பமானது எனக்காட்டினார்கள்.அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு

குறிப்பு : 1. “தொழுகைக்காக காத்திருப்பவர் தொழுகையில் இருக்கிறார்” என்ற நபிமொழிக்கொப்ப ‘அஸர்‘ தொழுத ஒருவர் ‘மக்ரிபை‘ எதிர்பார்த்துத் தொழ உள்ளார். ஆகவே அக்கருத்தில் நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வார்த்தையைக் கூறியிருக்கிறார்கள் என்றும்,2.‘யுஸல்லீ‘ என்ற அரபி வார்த்தைக்கு துஆ கேட்கிறார் என்ற பொருளும் உண்டு. ஆகவே துஆ கேட்கிறார் - கேட்டவராக என்றும் ‘காயிமுன்‘ நின்றவராக என்பதற்கு அதைத்தொடர்ந்து செய்பவராக என்றும் ஆகிய இருகருத்துக்கள் குர்ஆன் ஹதீஸின் தெளிவில் உங்கள்முன் வைக்கப்பட்டுள்ளது.

ஸஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண் : 402

ஜும்ஆ தினத்தன்று ‘துஆ‘ அங்கீகரிக்கப்படும் நேரம் பற்றிய விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர்ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாகஉமது தந்தை அறிவிக்கும் அறிவிப்பை நீர் கேள்விப்பட்டதுண்டா? என அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹ் அன்ஹு அவர்கள், (அபுமூஸா அல் அஷ்அரியாகிய) என்னிடம் கேட்டனர். அதற்குநான் ‘ஆம்‘ “அந்நேரம் (என்பது) இமாம் மிம்பரில் அமர்ந்(த)து (முதல்) தொழுகை நிறைவுபெறும் வரைக்குமுள்ள இடைப்பட்ட நேரமாகும்” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறக்கூடியவர்களாக இருந்ததை நான் செவியுற்றேன் என்றேன்.அறிவிப்பவர் : அபுமூஸா அல் அஷ்அரி ரளியல்லாஹு அன்ஹுகுறிப்பு : இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர்அபுபுர்தா ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடன் நின்று விட்டது. நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் வரை இத்தொடர் சென்றடையவில்லை. ஆகவே ‘ஜும்ஆ‘ நாளன்று ‘துஆ‘ அங்கீகரிக்கப்படும் நேரம் ‘‘அந்நாளின் கடைசி நேரமாகும்‘‘ என ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு மற்றும் அவரல்லாத மற்றவர்களின் அறிவிப்பில் நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் வரை சேர்ப்பிக்கப்பட்ட சரியான ஹதீஸ்களில் தெளிவாக வந்துள்ளன. அவையாவும் அது அந்நாளின் கடைசி நேரம் என்பதையே உறுதிப்படுத்துகிறது.

ஸஜ்தாவின் சிறப்புகள்!..




தூய்மையான வணக்கங்களுக்குச் சொந்தக்காரனாகிய அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்: இரவு பகல் சூரியன் சந்திரன் ஆகியவை அவனது சான்றுகளில் உள்ளவை. சூரியனுக்கோ சந்திரனுக்கோ ஸஜ்தா செய்யாதீர்கள். அவனையே நீங்கள் வணங்கு வோராக இருந்தால் அவற்றைப் படைத்த அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்யுங்கள் (அல்குர்ஆன் 41:37)

அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீர் அதிகமாக ஸஜ்தா செய்து வருவீராக! நிச்சயமாக நீர் செய்யும் ஒவ்வொரு ஸஜ்தாவைக் கொண்டும் அல்லாஹ் உமக்கு ஓர் அந்தஸ்தை உயர்த்துகிறான். உம்மை விட்டு ஒரு பாவத்தை அழிக்கிறான்.(அபூ அப்துல்லாஹ் தவ்பான் (ரலி) முஸ்லீம்)

நீங்கள் ருகூஉ செய்தீர்களானாலும், ஸூஜூது செய்தீர் களானாலும் ருகூஉவையும் ஸஜ்தாவையும் நிறைவாகச் செய்யுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அனஸ் (ரலி) நஸயி 1009)

ஸஜ்தா என்று சொல்லப்படக் கூடிய சிரவணக்கம் இஸ்லாத்தின் பார்வையில் மிகுந்த சிறப்புக்குரியது.

எண்சாண் உடம்பையும் கூனிக்குறுகி ஏழு உறுப்புக்கள் தரையில்படுமாறு தங்களைப் படைத்த இறைவனாகிய அல்லாஹ்வுக்கு மட்டுமே மனிதர்கள் செய்யும் வணக்கம் தான் ஸஜ்தா என்பது.

ஸஜ்தா என்ற சிரவணக்கம் மனிதன் காட்டக்கூடிய பணிவுகளின் இறுதி எல்லைக்கோடு அல்லது மரியாதைகளின் உச்சகட்டநிலை என்று சொன்னால் அது மிகையாகாது.

மனித உடற்கூற்றில் தலை எத்தனை பிரதான படைப்பாக இருக்கிறது என்பதை மனிதன் சிந்தித்துப் பார்ப்பானே யானால் வல்ல நாயன் அல்லாஹ் எத்தனை நுண்ணறிவோடு அதைப் படைத்திருக்கிறான் என்ற அற்புதத்தை புரிந்து கொள்வதுடன் அந்த தலை அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே சாய்க்கப்பட வேண்டிய ஒன்று மற்ற யாருக்கும் எதற்கும் சாய்க்கப்பட கூடாத ஒன்று என்ற மிகமிகச் சரியான - நியாயமான உணர்வுகளையும் அம்மனிதன் பெற்றுக் கொள்ள முடியும். இன்றைக்கு மனிதர்களைப் பார்க்கிறோம்.

மனிதர்களில் சிலர் எது எதையோ வணங்குவதை சிரம் தாழ்த்தி வணங்குவதைப் பார்க்கிறோம். விழுந்து கும்பிடுவதைப் பார்க்கிறோம். நெடுஞ்சாண்டையாக விழுவதைப் பார்க்கிறோம். தங்களை விட கீழான கீழினும் கேவலமான படைப்புகளுக்கெல்லாம் சிரவணக்கம் செய்வதைப் பார்க்கிறோம். எந்தவொன்றையும் படைக்கவோ பாதுகாக்கவோ சக்தி இல்லாதவைகளுக்கு போய் சிந்திக்கும் ஆற்றல் பெற்ற மனிதன் போய் சிரம் சாய்த்து வணங்குகிறான்.

அப்படி அவைகளுக்கு சிரம் சாய்ப்பதற்கு அம்மனிதன் ஏதும் வேத ஆதாரத்தைப் பெற்றிருக்கிறானா? நபித்துவத்தின் ஆதாரத்தை பெற்றுள்ளானா என்று ஆராய்ந்து பார்த்தால் சுத்தமாக இல்லை. ஷைத்தானிய ஊசலாட்டம். மனோஇச்சைகளின் தூண்டுதல் இவற்றுக்கு ஆட்பட்டுப்போய் அழிவிலும் அவமானத்திலும் போய் மனிதர்களில் சிலர் வீழ்ந்துள்ளனர். மேதை என்பார்கள். ஜீனியஸ் என்பார்கள். அரசியல் வித்தகர் என்பார்கள்.

விஞ்ஞானத்தில் மேம்பட்டவர் என்று பாராட்டுவார்கள். ஆனால் மெய்யறிவின் குறைபாட்டால் தன்னைப் படைத்த இரட்சகனுக்கு உண்மையான இறைவனுக்கு சிரம் சாய்க்கும் பாக்கியமில்லாமல் இருப்பதை நாம் பார்க்கிறோம். ஆனால் மகத்தான இரட்சகன் அல்லாஹ்வின் கிருபையால் அவனுக்கு ஸஜ்தா செய்யும் பாக்கியம் பெற்ற நாம் எந்த அளவுக்கு அந்த விஷயத்தில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறோம்?

ஸஜ்தா செய்வது நல்லடியார்களின் பண்பு: அல்லாஹ் கூறுகிறான்.

அளவற்ற அருளாளனின் அடியார்கள் பூமியில் பணிவாக நடப்பார்கள். தம்முடன் அறிவீனர்கள் உரையாடும் போது ஸலாம் கூறி விடுவார்கள். அவர்கள் தமது இறைவனுக்காக ஸஜ்தாச் செய்தும் நின்றும் இரவைக் கழிப்பார்கள். அல்குர்ஆன். (25: 63 – 64)

நம்பிக்கைக் கொண்டோரே!ருகூவு செய்யுங்கள்! ஸஜ்தாச் செய்யுங்கள்! உங்கள் இறைவளை வணங்குங்கள். நன்மையைச் செய்யுங்கள். நீங்கள் வெற்றி பெறுவீர்கள். (அல்குர்ஆன் 22:77)

அடிபணியாதவர்களின் நிலை: அல்லாஹ் கூறுகிறான்:

அளவற்ற அருளாளனுக்கு ஸஜ்தாச் செய்யுங்கள் என்று அவர்களிடம் கூறப்படும்போது அது என்ன அளவற்ற அருளாளன்? நீர் கட்டளையிடுபவருக்கு நாங்கள் ஸஜ்தாச் செய்வோமா? என்று கேட்கின்றனர். இது அவர்களுக்கு வெறுப்பையே அதிகமாக்கியது (அல்குர்ஆன். 25: 60)

அல்லாஹ்வின் தூதரே! கியாமத் நாளில் எங்கள் இறைவனை நாங்கள் காண முடியுமா? என்று சிலர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) மேகம் மறைக்காத முழு நிலவைக் காண்பதில் நீங்கள் ஐயம் கொள்வீர்களா? என்று கெட்டார்கள். நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! இல்லை என்றார்கள். மீண்டும் நபி(ஸல்) அவர்கள் மேகம் மறைக்காத சூரியனைக் காண்பதில் நீங்கள் ஐயம் கொள்வீர்களா? என்று கேட்டார்கள். அதற்கும் நபித்தோழர்கள் இல்லை என்றனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் இதேப்போல்தான் நீங்கள் உங்கள் இறைவனைக் காண்பீர்கள் என்று கூறினார்கள்.

தொடர்ந்து கியாமத் நாளில் மக்களெல்லாம் ஒன்று திரட்டப்பட்டதும் யார் எதனை வணங்கினார்களோ அதனை பின்பற்றி செல்லட்டும் என்ற இறைவன் கூறுவான்.சிலர் சூரியனை பின்பற்றுவர்.சிலர் சந்திரனைப் பின்பற்றுவர். மற்றும் சிலர் தீயசக்திகளைப் பின்பற்றுவர் அப்போது இறைவன் அவர்களை நோக்கி நான் தான் உங்கள் இறைவன் என்பான். அதற்கு அவர்கள் எங்கள் இறைவன் எங்களிடம் வரும் வரை நாங்கள் இங்கேயே இருப்போம்.

எங்கள் இறைவன் எங்களிடம் வந்தால் அவனை நாங்கள் அறிந்து கொள்வோம் என்பார்கள். பின்னர் அல்லாஹ், அவர்களிடம் வந்து நான்தான் உங்கள் இறைவன என்பான். அதற்கு அவர்கள் நீ எங்கள் இறைவன் தான்! என்பார்கள்;

பின்பு அவர்களை இறைவன் அழைப்பான். நரகத்தின் மேற்பரப்பில் பாலம் ஒன்று ஏற்படுத்தப்படும். நபிமார்கள், தத்தமது சமுதாயத்தினருடன் அதைக் கடப்பார்கள். அவ்வாறு கடந்து செல்பவர்களில் நானே முதல் நபராக இருப்பேன். அன்றைய தினத்தில் இறைத்தூதர்களைத் தவிர வேறு யாரும் பேச மாட்டார்கள். இறைவா! காப்பாற்று! இறைவா காப்பாற்று! என்பதே அன்றைய தினம் பேச்சாக இருக்கும். நரகத்தில் கருவேல மரத்தின் முட்கள் போன்ற இரும்பு ஆயுதங்கள் இருக்கும். என்ற நபி(ஸல்) அவர்கள் கூறி விட்டு நீங்கள் கருவேல மரத்தின் முள்ளைப் பார்த்திருக்கிறீர்களா? என்ற கேட்டார்கள். நபித்தோழர்கள் ஆம் என்றனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் நிச்சயமாக அது கருவேல மரத்தின் முள் போன்றுதான் இருக்கும் என்றாலும் அதன் பருமனை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். அது மனிதர்களின் செயல்களுக்கேற்ப அவர்களை இழுக்கும்.

நல்லறங்கள் முழுவதும் அழிக்கப்பட்டவர்களும் அவர்களில் இருப்பர். கடுகளவு அமல்கள் எஞ்சியிருந்து அதனால் வெற்றி பெற்றவர்களும் அவர்களில் இருப்பர். நரகவாசிகளில் அல்லாஹ் நாடுபவர்களுக்கு அருள் செய்ய எண்ணும்போது அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருந்வர்களை நரகிலிருந்து வெளியேற்றுமாறு வானவர்களுக்கு உத்தரவிடுவான்.வானவர்கள் அவர்களை வெளியேற்று வார்கள் ஸஜ்தா செய்த அடையாளத்தை வைத்து இவர்களை வானவர்கள் அடையாளம்; காண்பார்கள்.

ஸஜ்தாச் செய்ததினால் வடுக்களை நரகம் தீண்டாது நரகத்திற்கு அல்லாஹ் ஹராமாக்கி வைத்து விட்டான். அவர்கள் நரகலிருந்து வெளியேற்றப்படுவார்கள். ஸஜ்தாவின் வடுவைத்தவிர மனிதனின் முழு உடம்பையும் நரகம் சாப்பிட்டு விடும். நரகிலிருந்த கரிந்தவர்களாக வெளியேறுவார்கள். அவர்கள் மீது உயிர்தண்ணிர் தெளிக்கப்படும். ஆற்றோரத்தில் தானியம் வளர்வது போல் அவர்கள் செழிப்பார்கள். பின்னர் அடியார்களுக்கிடையே அல்லாஹ் தீர்ப்பை முடித்து வைப்பான்.(அபூஹூரைரா(ரலி) புகாரி )

ஸஜ்தாச் செய்யும் முறை:

நீங்கள் ருகூஉ செய்தீர்களானாலும், ஸூஜூது செய்தீர் களானாலும் ருகூஉவையும் ஸஜ்தாவையும் நிறைவாகச் செய்யுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அனஸ்(ரலி) நஸயி 1009)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நெற்றி, இரு கைகள், இரண்டு மூட்டுக்கால்கள், இரண்டு பாதங்களின் முனைகள் ஆகிய ஏழு உறுப்புகள் படுமாறு ஸஜ்தா செய்யும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். ஆடையோ முடியோ (தரையில்படாதவாறு) தடுக்கக்கூடாது எனவும் கட்டளையிடப்பட்டுள்ளேன்.(இப்னு அப்பாஸ்(ரலி) புகாரி 806)

உங்களில் ஒருவர் ஸஜ்தாச் செய்தால் ஒட்டகம் (கால்நடை) அமருவதைப் போன்று அமராதீர்கள். அவரது இரு கைகளையும் முதலில் வைக்கவும் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.(அபூஹூiரா(ரலி),அபூதாவுத் அஹ்மது, நஸயி)

நபி(ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்வார்களானால் தங்களது மூக்கையும் நெற்றியையும் தரையின் மீது அழுத்தமாக வைப்பார்கள்.இன்னும் தங்களது இரு கைகளையும் விலாப் பகுதியிலிருந்து தூரமாக்கி தங்களது இருமுன் கைகளையும் தங்களது தோள் பட்டைகளுக்கு சமமாக ஆக்குவார்கள். அபுஹூரைரா(ரலி) அபூதாவுத்

பூமியில் நெற்றி தொட்டதை எவரின் மூக்குத் தொட வில்லையோ அவருக்குத் தொழுகையில்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.இப்னு அப்பாஸ்(ரலி) தாரகுத்னி

தொழுகையில் திருடர்கள்:

மனிதர்களில் திருட்டுத்தனம் செய்பவர்களில் மிகக் கெட்டவன் தொழுகையில் திருட்டுத்தனம் செய்யக்கூடியவனே! என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அப்போது சஹாபாக்கள்) அல்லாஹ்வின் தூதர் அவர்களே! தொழுகையில் அவன் எவ்வாறு திருட்டுத்தனம் செய்வான்? எனக் கேட்டனர். (அதற்கு நபி(ஸல்) அவர்கள், தொழுகையில் ருகூவையும் ஸூஜூதையும் அவன் நிறைவாகச் செய்ய மாட்டான் (அவ்வாறு நிறைவாகச் செய்யாதவனே திருடர்களில் மிகக் கெட்டவன் எனக் கூறினார்கள்.அபூகதாதா(ரலி),நுஃமான் பின் முர்ரா(ரலி) இப்னு அபீ ஸைபா, தப்ரானி அஹ்மது)

ஸஜ்தாவின் துஆக்கள்:

ஸூப்ஹான ரப்பியல் அஃலா (மிக உயர்வுமிக்க என் இரட்சகன் தூயவன்) என்று நபி(ஸல்) அவர்கள் ஸூஜூதில் மூன்று முறைக் கூறக்கூடியவர்களாக இருந்தார்கள். (ஹுதைஃபா(ரலி) நஸயீ)

நபி(ஸல்) அவர்கள் தங்களது ருகூவிலும் ஸூஜூதிலும் ஸூப்பூஹூன் குத்தூஸூன் ரப்புல் மலாயிகத்தி வர்ரூஹ் (துதிக்கப்படுபவனும், பரிசுத்தமாக்கப்படுபவனும் ரூஹ் என அழைக்கப்பட்ட ஜிப்ரயில் அவர்களுக்கும் இரட்சகனாகிய அல்லாஹ் தூயவன்) என்று கூறக்கூடியவர்களாக இருந்தார்கள்.ஆயிஷா(ரலி) நஸயி 1086)

இப்படி ஏகத்துவ உறுதியை இறைவனிடம் பணிவை இம்மை மறுமையில் நாம் கற்பனை செய்துகூட பார்க்க முடியாத எண்ணற்ற நன்மைகளை பெற்றுதரும் ஸஜ்தா என்ற செயலை அல்லாஹ்வுக்காக உறுதியுடன் செய்யும் நன்மக்களாக நாம் அனைவரும் ஆகிட வல்ல நாயன் அல்லாஹ் நற்கிருபை செய்வானாக!


நியூட்டன் போட்ட கணக்குக்கு தீர்வு கண்டு சாதனை படைத்த இந்திய மாணவன்




லண்டன்: கடந்த 350 ஆண்டுகளுக்கும் மேலாக தீர்வு காணப்படாமல் இருந்து வந்த ஒரு கணிதப் புதிருக்கு விடை கண்டு அனைவரையும் வியக்க வைத்துள்ளார் 16 வயதேயான இந்திய மாணவன். இந்தக் கணிதப் புதிரைப் போடட்வர் மறைந்த சர் ஐசக் நியூட்டன் ஆவர்.

கடந்த 350 ஆண்டுகளாக உலக கணிதவியலாளர்களை குழப்பி வந்த புதிராகும் இது. கணித மேதைகள் பலரும் கூடஇந்தப் புதிருக்கு விடை காண முடியாமல் திணறி வந்தனர். ஆனால் 'ஜஸ்ட் லைக் தட்' இதற்கு விடை கண்டுள்ளார் செளரியா ராய் என்ற இந்திய வம்சாவளி மாணவன்.

ஜெர்மனியின் டிரட்சென் பகுதியில் வசித்து வருகிறார் ராய். இவர் விடை கண்டுள்ள கணிதப் புதிர், டைனமிக்ஸ் தியரியில் வருகிறது. டிரட்சென் பல்கலைக்கழகத்திற்கு ராய் பள்ளிச் சுற்றுலாவாக சென்றபோதுதான் இந்தக் கணிதப் புதிர் குறித்து ராய்க்குத் தெரிய வந்தது. அப்போது அங்குள்ள பேராசிரியர்கள் இதுகுறித்து கூறியபோது, இதற்கு விடை காணவே முடியாது என்று கூறினர்.

ஆனால் அதை சவாலாக எடுத்துக் கொண்டார் ராய். பின்னர் அதற்கு விடை காணும் முயற்சியில்இறங்கினார், வெற்றியும் பெற்றார்.

இது மட்டுமல்லாமல் மிகக் கடினமான கணிதப் புதிர்களைக் கூட எளிதாக அவிழ்க்கும் வித்தை இவரிடம் உள்ளது. 6ம் வயதிலிருந்தே இதே வேலையாகத்தான் திரிகிறாராம் இவர்.

அதேசமயம், தன்னை மேதை என்று யாரும் அழைக்க வேண்டாம் என்றும், அந்த அளவுக்கு தான் இன்னும் வளரவில்லை என்றும் அடக்கத்துடன் கூறுகிறார்.

4வயதாகஇருந்தபோது கொல்கத்தாவிலிருந்து ஜெர்மனிக்கு வந்து செட்டிலானவர் ராய். தற்போது தனது தாய் மொழியான பெங்காலியை விட ஜெர்மனியை மிக லாவகமாக பேசுகிறார் ராய்.

SAMSUNG GALAXY S3


SAMSUNG GALAXY S3
General
2G Network GSM 850 / 900 / 1800 / 1900
3G Network HSDPA 850 / 900 / 1900 / 2100
4G Network LTE (regional)
Announced 2012, May
Status Coming soon. Exp. release 2012, May
Body Dimensions 136.6 x 70.6 x 8.6 mm
Weight 133 g- Touch-sensitive controls
Display Type Super AMOLED capacitive touchscreen, 16M colors
Size 720 x 1280 pixels, 4.8 inches (~306 ppi pixel density)
Multitouch Yes
Protection Corning Gorilla Glass 2- TouchWiz UI v4.0
Sound Alert types Vibration; MP3, WAV ringtones
Loudspeaker Yes
3.5mm jack Yes
Memory Card slot microSD, up to 64 GB
Internal 16/32/64 GB storage, 1 GB RAM
Data GPRS Class 12 (4+1/3+2/2+3/1+4 slots), 32 - 48 kbps
EDGE Class 12
Speed HSDPA, 21 Mbps; HSUPA, 5.76 Mbps
WLAN Wi-Fi 802.11 a/b/g/n, DLNA, Wi-Fi Direct, Wi-Fi hotspot
Bluetooth Yes, v4.0 with A2DP, EDR
NFC Yes
USB Yes, microUSB v2.0 (MHL), USB On-the-go
Camera Primary 8 MP, 3264x2448 pixels, autofocus, LED flash
Features Simultaneous HD video and image recording, geo-tagging, touch focus, face and smile detection, image stabilization
Video Yes, 1080p@30fps
Secondary Yes, 1.9 MP, 720p@30fps
Features OS Android OS, v4.0.4 (Ice Cream Sandwich)
Chipset Exynos 4212 Quad
CPU Quad-core 1.4 GHz Cortex-A9
GPU Mali-400MP
Sensors Accelerometer, gyro, RGB sensor, proximity, compass, barometer
Messaging SMS(threaded view), MMS, Email, Push Mail, IM, RSS
Browser HTML, Adobe Flash
Radio Stereo FM radio with RDS
GPS Yes, with A-GPS support and GLONASS
Java Yes, via Java MIDP emulator
Colors Pebble blue, Marble white- MicroSIM card support only- S-Voice natural language commands and dictation- Smart Stay eye tracking- Dropbox (50 GB storage)- Active noise cancellation with dedicated mic- TV-out (via MHL A/V link)-SNSintegration- MP4/DivX/XviD/WMV/H.264/H.263 player
- MP3/WAV/eAAC+/AC3/FLAC player- Organizer- Image/video editor- Document editor (Word, Excel, PowerPoint, PDF)- Google Search, Maps, Gmail,
YouTube, Calendar, Google Talk, Picasa integratio- Voice memo/dial/commands
- Predictive text input (Swype)Battery Standard battery, Li-Ion 2100 mAh
Stand-by Up to 590 h (2G) / Up to 790 h (3G)
Talk time Up to 21 h 40 min (2G) / Up to 11 h 40 min (3G)
Misc SAR US 0.55 W/kg (head) 1.49 W/kg (body)
SAR EU 0.21 W/kg (head)
Price Rs. 58.000/=
Tests Camera Photo / Video
Contact :- M. Mohamed Fayas
Mob : 077 4708561

சாரே ஜஹான் சே அச்சா பாடல் தேசிய பாடலாக மறுக்க பட்ட காரணம் உங்களுக்கு தெரியுமா சகோதர்களே !!!!!!!!!!!





இந்திய சுதந்திரம் அடைந்த பிறகு எதை தேசிய கீதமாக வைக்கலாம் என்று மகாத்மா காந்தி ஜி மற்றும் நேரு ஆகியோர் சாரே ஜஹான் சே அச்சா பாடலை வைக்கலாம் என்று சொன்னார்கள் . அதற்க்கு சில இந்து பிரிவினர் மறுப்பு தெரிவிதது வந்தே மாதரம் பாடலை வைக்க சொன்னார்கள் அதனால்காந்தி ஜி மற்றும் நேரு பேச்சு வார்த்தை நடத்தி இருவருக்கும் பாதகம் இல்லாமல் ரவீந்தரநாத் தாகூர் எழுதிய ஜன கன மனகன பாடலை தேசிய கீதமாக அறிவித்தார்கள் .ஆனால் இன்றும் நாம் சாரே ஜஹான் சே அச்சா பாடலை யாராலும் மறக்க முடியவில்லை

நீங்களே ஒரு முறை இந்த பாடலை முனு முணுத்து பாருங்கள் எவ்வளவு வீர தீரமாக இருக்கு என்று . இன்றும் குடியரசு தினம் சுதந்திர தினம் போன்ற வற்றிற்கு இந்த பாடலையும் போட்டு கேட்பவர்கள் கேட்கத்தான் செய்கிறார்கள் .இன்றும் குடியரசு தின விழா ,சுதந்திர தின விழாவில் இராணுவ அணிவகுப்பில் இந்த பாடலின் இசையே கொண்டு தான் துவக்கம் செய்கிறார்கள் . முஸ்லிம்களின் பங்கு ஒன்று இரண்டு இல்லை விடுதலை போராட்டத்தில் சொல்லிக்கொண்டே போகலாம் , ஆனால் அதுவெல்லாம் மறுக்க படுகிறது மறைக்க படுகிறது என்று நினைக்கும் போது தான் எங்களுடைய முஸ்லிம் மக்களின் நெஞ்சம் துடிக்கிறது . சுதந்திரத்துக்கு இரத்தம் சிந்திய மக்கள் .இன்று சில கயவர்களால்
சுதந்திர இந்தியாவில் இருந்து கொண்டே இரத்தம் சிந்தி கொண்டு இருகிறார்கள் .

அல்லாமா இக்பாலை பற்றி

அல்லாமா இக்பால் ஒரு மிக சிறந்த கவிஞர் .அவர் இங்கிலாந்தில் நடை பெற்ற இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொண்ட இதியயர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு .அந்த மாநாட்டில் கலந்து கொண்ட அவரை இத்தாலி அரசு தன் நாட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்தது அவரும் அழைப்பை ஏற்று இத்தாலிக்கு சென்றார் அல்லாமா இக்பால் வருகையே அறிந்த முசோலினி அவரை சந்திக்க விருப்ப பட்டார் .பின்பு இருவரும் சந்தித்து கலந்து உரையாடினார்கள் பின்பு முசொளினின் பாராட்டையும் பெற்றார் .

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன், இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் என்ற பிரிவினைகள் இல்லாமல் இருந்தது. அப்போது இந்தியா என்பதை விட, இந்துஸ்தான் என அழைக்கவே சுதந்திரப் போராட்ட வீரர்கள் விரும்பினர். இதில் ஒருவர் தான் முகமது இக்பால். அல்லாமா இக்பால் என்ற மற்றொரு பெயரிலும் அழைக்கப்பட்ட இவர், ஒரு உருது கவிஞர். இவர் உருது மொழியில் எழுதிய பி...ரபல பாடல் தான், சாரே ஜாஹன் சே அச்சா.
விலை மதிக்க முடியாத படைப்புகளுக்கு சொந்தக்காரராக விளங்கிய அல்லாமா இக்பால் 1873 பிப்ரவரி 22 இல் பிறந்தார். பள்ளிப் பருவத்திலேயே எழுதுவதில் ஆர்வம் மிகுந்தவராக விளங்கியவர்.

மௌலானா அபுல் அலா மௌதுதியின் சந்திப்பு அல்லாமா இக்பாலின் சிந்தனையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் பின்னர் அவரது கவிதைப் பயணம் ஆன்மிக வெளிச்சம் மிகுந்த பாதையில் அமைந்தது. மாணவப் பருவத்திலேயே மிகவும் திறமையாகத் திகழ்ந்த இக்பால் இங்கிலாந்தில் சட்டம் பயிலும் மாணவராக இருந்தபோதும் கூட தனது எழுத்துப் பணியினைத் தொடர்ந்தார்.

இங்கிலாந்திலும், ஜெர்மனியிலும் தனது படிப்பை முடித்துக் கொண்ட இக்பால் சட்டத்துறையில் தொழிலை ஆரம்பித்தார். ஆனாலும் அரசியல், பொருளாதாரம், வரலாறு, மெய்யியல், மற்றும் சமயம் ஆகிய துறைகளிலேயே அவர் நிறைய எழுதினார்.
இக்பால் அவர்களால் எழுதப்பட்ட "சாரே ஜகான் சே அச்சா, இந்துஸ்தான் ஹமாரா ஹமாரா" என்று தொடங்கும் பாடல் 1947 ஆகஸ்ட்டில் ஆங்கிலேயர் விரட்டியடிக்கப்பட்டு இந்தியாவின் நாடாளுமன்றத்தில் முதன்முதலாக ஒலித்தது. மறைந்த நேரு அவர்களால் அதிகம் கையாளப்பட்ட பாடலும் இதுவாகும்

இப்போது பாகிஸ்தானில் உள்ள லாகூர் அரசு கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றிய இக்பாலின் இந்த கவிதை 1904ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி இட்டிஹத் என்ற வாரஇதழில் வெளியானது. பின்னர் அதுவே ஆங்கிலேயருக்கு எதிராக குரல் கொடுக்க பயன்படும் முக்கிய கருவியாக மாறியது. தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகளும் பல இடங்களில் 100க்கும் மேற்பட்ட முறையில் பாடி சுதந்திர தாகத்தை மக்களுக்கு புகட்டினர்.

கடந்த 1965ம் ஆண்டு, இந்த கவிதைக்கு சிதார் இசைக் கலைஞர் பண்டிட் ரவி சங்கர் இசை அமைத்து, பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் பாடினார். அதன்பின் மிகவும் பிரபலமடைந்த இப்பாடலின் மெட்டு, இந்திய முப்படைகளின் அணிவகுப்பின் போது வாசிக்கப்படும் முக்கிய இசை என்பது யாவரும் அறிந்ததே.

பாடலின் கருத்து:
-----------------------------
இந்துஸ்தான் அல்லது இந்திய நாடு, உலகில் உள்ள மற்ற எல்லா நாடுகளை விட சிறந்தது. அது நாம் வசிக்கும் தோட்டம், நாம் அதில் உள்ள நைட்டிங்கேல் பறவைகள். அந்நிய நாடுகளில் வசித்தாலும் நமது தாய்நாட்டின் நினைவு இதயத்தை வருட்டிக் கொண்டிருக்கும்.

உயர்ந்த, வானாளாவிய மலை தொடர்கள், அவை நமக்கு அரண்களாக மாறின. மனதை மயக்கும் ஆயிரக்கணக்கான ஆறுகள், அவை நாட்டை சொர்க்க பூமியாக மாற்றிவிட்டன. நம் ஒவ்வொருவரிடையே ஏற்படும் பேதங்களை பொறுத்துக் கொள்ள மதங்கள் நமக்கு வழிகாட்டவில்லை.

இந்துஸ்தானில் வாழும் நாம் இந்தியர்கள், இந்துஸ்தானைச் சேர்ந்தவர்கள்.

உலக சாம்ராஜ்ஜியங்களான கிரேக்கம், எகிப்து, ரோம் ஆகியவை அடையாளம் தெரியாமல் மாறி மறைந்தன.

ஆனால், நமது அடையாளங்கள் மட்டும் இன்றும் மாறவேயில்லை. அப்படியே நூற்றாண்டுகள் மாறினாலும், காலங்கள் கைவிட்டாலும் நமது வளர்ச்சி மறையாது என்று போகிறது இந்தப் பாடல்

Great Hashim Amla

இளம் வயதில் நரை முடியே தவிர்க்க சில தகவல் !!!




இளம் வயது உள்ளவர்களுக்கு நரை முடி இன்றைய காலகட்டத்தில் பெரும் பிரச்சனையாக மாறிவிட்டது. கலரிங் பண்ணுவது நமக்கு நல்லது அல்ல ! எத்தனையோ கலரிங் வந்தாலும் கூட உண்மையான கருப்பு நிறத்திற்கு இருக்கும் மதிப்பே தனி என்று தான் சொல்ல வேண்டும்..

* நரை முடியை முற்‌றிலும் ஒழிக்க கறிவேப்‌பிலையை உணவில் சேர்‌த்துக் கொண்டால் போதும்.குளிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் தேங்காய் எண்ணையை நன்கு தலையில் தேய்த்து மஜாஜ் செய்ய வேண்டும். பின்னர் தலையை தேய்த்து குளிக்க வேண்டும்..இவ்விதம் செய்தால் நல்ல அடர்தியான முடியுடன் கரு நிற கூந்தலையும் பெற முடியும்.

* தலைக்கு குளித்த சில நிமிட நேரத்தில் தலைக்கு எண்ணெய் தடவுதல் கூடாது.. தலைக்குக் குளித்ததும் ஈரம் காய்வதற்கு முன்பே எண்ணெய் வைப்பதால்தான் பலருக்கு செம்மட்டை நிறத்தில் முடி வளர்கிறது. அதோடு முடு அதிகம் கொட்டவும் செய்கிறது..

* முளைக்கீரையை தினமும் சாப்பிட்டு வந்தால் நரை முடி கருப்பாக மாறும்.

* முருங்கைகீரையை வாரம் இரு முறை உணவில் சேர்த்துக்கொண்டால் முடி உதிர்வது நிற்கும். முடி நீண்டுவளரும். நரை முடி அகலும். முருங்கைகீரையில் இரும்புச் சத்து, (iron)சுண்ணாம்புசத்து (calcium)கணிசமாக உள்ளது.

இளம் வயதில் நரை முடி வராமல் தடுக்க கறிவேப்பிலை பயன்படும் என்பது தெரிந்த விடயம். ஆனால் தெரியாத விடயம் ஒன்று உள்ளது. அதாவது, நரை முடி வந்தவர்களும், உணவிலும், தனியாகவும் கறிவேப்பிலையை அதிகமாக சாப்பிட்டு வந்தால் நரை முடி மறைந்து விடும் . சரி நரை முடி என்று சொன்ன உடன் என்னக்கு பிடித்து சில வரிகள் நியபகதிர்க்கு வந்தது கிழே


"இயற்கையிடம் போராடி ...தோற்று ...
ஒவொரு மனிதனும் கடைசியில் காட்டும் ...
சமாதான கொடி... இந்த நரை முடி தான் "......

மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்:



மீன் சாப்பிடுபவர்கள் எந்த நோயைப்பற்றியும் கவலைப்பட வேண்டியது இல்லை. ஆஸ்துமா முதல் இருதய நோய் வரை அனைத்தையும் தடுக்கும் மருத்துவ குணம் கொண்டது.

மீனில் கொழப்பு இல்லை, அதிகமாக புரோட்டின் சத்து உள்ளது. இதில் ஒமேகா 3 என்ற ஒரு வகை ஆசிட் வேறு எந்த உணவிலும் இல்லை உடலில் எந்த நோயும் வரமால் தடுக்க இந்த ஆசிட் மிகவும் உதவுகிறது.

ஆண் ஒருவர் நாள்தோறும் ஒருமுறை மீன் உட்கொண்டால் இருதயநோய், உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் விகிதத்தை 30 சதவீதம் வரை குறைக்கலாம். 2 நாட்களுக்கு ஒரு முறை உட்கொண்டால் உடலுக்குத் தேவைப்படுமங சத்து போதிய விகிதம் கிடைக்கும்.

ஆஸ்துமா நோய் வரவே வராது. அதுவும் குழந்தையில் இருந்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்பே இல்லை.

மூளைக்கும், கண் பார்வைக்கும் மிகவும் பயன் அளிக்கிறது.

புற்று நோய வராமல் தடுப்பதில் பெரும் பங்களிக்கிறது.

No Roaming

ഉപഭോക്താക്കളുടെ റോമിങ്ങ് നിരക്ക് പൂര്ണ്ണമായും ഒഴിവാക്കാൻ വ്യവസ്ഥ ചെയ്യുന്ന പുതിയ ടെലിഫോണ് നയത്തിന് കേന്ദ്ര മന്ത്രിസഭ അംഗീകാരം നൽകി. സേവന ദാതാവിനെ മാറ്റിയാലും ഇനി മുതൽ ഉപഭോക്താവിന് ഇന്ത്യയിൽ എവിടെയും ഒരേ നമ്പര് ഉപയോഗിക്കാം
 
 
The Cabinet on Thursday approved a new telecom policy that seeks to do away with roaming charges across the country and simplifies the licencing policy, Telecom Minister Kapil Sibal said Thursday. "Affordability of the consumers is the core of our policy," Sibal told reporters after a cabinet meeting presided over by Prime Minister Manmohan Singh. Sibal said the new policy aims at free roaming facility throughout the country.b The minister said the new policy seeks to provide a predictable and stable policy regime for a period of nearly 10 year

Thursday, May 31, 2012

முக்கிய அறிவுப்பு அவசியம் படிக்கவும்



முக்கிய அறிவுப்பு அவசியம் படிக்கவும்

ஐக்கிய அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சிநிலையம் வெள்ளி நைட்ரோ ஆக்சைடில் (silver nitro oxide) மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படுத்தவல்ல நோய் கிருமி உள்ளதை கண்டறிந்துள்ளது.

எனவே சுரண்டும் (scratch) வடிவில் உள்ள ரீ சார்ஜ் கார்டையோ அல்லது வேறு எந்த ஒரு சுரண்டல் கார்டையோ சுரண்ட நகங்களை பயன்படுத்த வேண்டாம். ஏனென்றால் அது வெள்ளி நைட்ரோ ஆக்சைடு (silver nitro ஒசிடே) மூலம் முலாம் (coating) செய்யப்படுகிறது.

எச்சரிக்கை இது நமக்கு skin cancer ஏற்படுத்தும் தன்மை கொண்டது. நண்பர்களே இந்த செய்தியை முடிந்த வரை எல்லாரிடமும் கொண்டு செல்லுங்கள்

வரலாற்றுக் குளறுபடிகள்



நம்மவர் என்ற படத்தில் நான் வரலாற்று ஆசிரியராக நடித்தேன். வரலாற்றுக் குளறுபடிகளைப் பற்றி நான் செய்த விமர்சனத்தை என்ன காரணத்திற்காகவோ சென்சாரில் வெட்டி விட்டார்கள். அதைச் சேர்க்க வேண்டுமென்று நான் வாதாடிய போதும் அவர்கள் ஏற்கவில்லை. அந்தப்பகுதி இதுதான்.

முகலாயர் ப்டையெடுப்பு என்றும், வெள்ளையர் வருகை என்றும் நாம் பாடம் சொல்லித்தருகிறோம்.முகலாயர்கள் இங்கு வந்து இங்குள்ள பெண்களையே திருமணம் செய்து கொண்டு இங்கேயே அரண்மனையைக்கட்டி ஆட்சி செய்தார்கள்.இந்த நாட்டை அவர்கள் வளப்படுத்தினார்களே தவிர, இங்கு சுரண்டி ஆப்கானிஸ்தானுக்கு கொண்டு போய் சேர்க்கவில்லை.

ஆனால் ஆங்கிலேயர்கள் இங்குள்ள வளங்களை சுரண்டி பிரிட்டனில் சேர்த்து வைத்தார்கள்.அவ்ர்கள் இந்த நாட்டை தம் நாடாக ஒருபோதும் கருதியதே இல்லை. ஆனால் முகலாய மன்னர் பகதூர்ஷா ”இந்த நாட்டில் என் உடலை புதைக்க ஆறுகெஜம் நிலம் கிடைக்கவில்லையே என்று கண்ணீர்க்கவிதையை பர்மா சிறையிலிருந்து எழுதினார்.

இந்த நாட்டை வளப்படுத்தியவர்களை படையெடுத்தவர்கள் என்றும், சுரண்டியவ்ர்களை வருகை தந்தவர்கள் என்றும் எப்படி சொல்லலாம் என்பது நான் வைத்த விவாதம்

- கமல ஹாசன்

நன்றி :வாழும் வரை போராடு, இனியவன் தமிழன்...

Wednesday, May 30, 2012

சர்' ஐசக் நியூட்டன் பற்றிய தகவல் !!!




ஒரு பொருள் கீழே விழுவது இயற்கை என்று நாம் நினைக்கிறோம். ஆனால் அந்த இயற்கைக்குப் பின்னால் உள்ள உண்மை என்ன என்று சிந்திக்கிறோமா? ஒருவர் சிந்தித்தார் அதன் மூலம்தான் புவியின் ஈர்ப்பு விசையைப் பற்றி உலகம் தெரிந்துகொண்டது. அந்த மாபெரும் கண்டுபிடிப்பைச் செய்தவர் இங்கிலாந்து தேசம் உலக்குத் தந்த தன்னிகரற்ற விஞ்ஞானி 'சர்' ஐசக் நியூட்டன். 1642 ஆம் ஆண்டு கிரிஸ்துமஸ் தினத்தன்று (டிசம்பர்-25) இங்கிலாந்தில் ஒரு சராசரி விவசாய குடும்பத்தில் பிறந்தார் நியூட்டன். ஆரம்பத்தில் அவர் படிப்பில் சரியாக கவனம் செலுத்தவில்லை. ஆனால் ஒருமுறை தன்னைக் கேலி செய்த வயதில் தன்னைவிட பெரிய சிறுவனை ஒரு கை பார்த்த பிறகு அவருக்கு தன்னம்பிக்கை அதிகரித்து நன்றாக படிக்கத் தொடங்கினார்.

சிறுவயதிலேருந்து நியூட்டனுக்கு அறிவியலில் அலாதி பிரியம். தண்ணீரிலும் வேலை செய்யும் கடிகாரத்தை அவர் சிறுவயதிலேயே உருவாக்கினார். அவருக்கு பதினான்கு வயதானபோது குடும்ப ஏழ்மையின் காரணமாக பள்ளிப் படிப்பை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. நியூட்டனின் கல்வி ஆசையை அறிந்துகொண்ட அவரது மாமன் சிறுது காலத்தில் புகழ்பெற்ற கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் டிரினிடி (Trinity College) கல்லூரியில் சேர்த்தார். மிகச்சிறப்பாகக் கற்றுத் தேர்ந்து 1665 ஆம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார் நியூட்டன். அவரது பல்கலைக்கழக நாட்கள் பற்றிய குறிப்புகள் அவ்வுளவாக இல்லை. ஆனால் அவர் பட்டம் பெற்ற இரண்டு ஆண்டுகளில் அவரது அறிவியல் மூளை அபரிமிதமாக செயல்படத் தொடங்கியது. நவீன கணிதத்தின் பல்வேறு கூறுகளை அவர் கண்டுபிடித்தார். Generalized binomial theorem, infinitesimal calculus போன்ற நவீன கணிதத்தின் பிரிவுகள் அவர் கண்டுபிடித்ததுதான்.

வளைந்தப் பொருள்களின் பரப்பையும் கெட்டியான பொருள்களின் கொள் அளவையும் கண்டுபிடிக்கும் முறைகள் அவர் வகுத்து தந்தவைதான். ஒருமுறை அவர் தனது (Wools Thorpe) தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தபோது ஓர் ஆப்பிள் பழம் மரத்திலிருந்து கீழே விழுவதைப் பார்த்தார். நியூட்டனுக்கு முன் தோன்றி மறைந்த மானிடர் அனைவரும் தங்கள் காலகட்டத்தில் பார்த்திருக்கக்கூடிய காட்சிதான் அது. ஆனால் அதனை இயற்கை என்று நினைத்து அப்படியே விட்டு விடாமல் அதைப்பற்றி சிந்தித்தார். ஏதோ ஒரு கண்ணுக்குத் தெரியாத சக்திதான் ஆப்பிள் பழத்தை புவியை நோக்கி விழச்செய்கிறது என்று ஊகித்தார் நியூட்டன். அவர் நினைத்தது சரிதான். உலகில் புவி ஈர்ப்பு விசை என்ற சக்தி இருப்பதால்தான் எல்லாப் பொருள்களும் கீழே விழுகின்றன. நாமும் மிதக்காமல் நடக்கிறோம் என்பது இப்போது நாம் அறிந்த உண்மை. அதனை கண்டுபிடித்து சொன்னதுதான் நியூட்டனின் மகத்தான சாதனை.

1667 ஆம் ஆண்டு தனது 25-ஆவது வயதில் நியூட்டன் டிரினிடி கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். டிரினிடி கல்லூரியில் அவருக்கு கெளரவ பொறுப்பு வழங்கப்பட்டது. அடுத்த சில ஆண்டுகளை அவர் முழுநேரமாக பல்வேறு ஆராய்ச்சிகளில் செலவிட்டார். ஒளியின் தன்மைப் பற்றி ஆழமாக ஆராய்ந்ததோடு தொலைநோக்கிகளை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தினார். ஓராண்டில் அவர் ஓர் தொலைநோக்கியையும் உருவாக்கினார். அதன்மூலம் ஜூபிடர் கோலின் நிலவுகளை அவரால் பார்க்க முடிந்தது. இன்றைய நவீன பலம் பொருந்திய தொலைநோக்கிகள்கூட நியூட்டனின் அந்த முதல் தொலைநோக்கியின் அடிப்படையில்தான் அமைந்திருக்கின்றன. 1669 ஆம் ஆண்டு டிரினிடி கல்லூரியில் கணக்கியல் பேராசிரியராக நியூட்டன் பொறுப்பேற்றார். அதன்பின் பிரசித்திப் பெற்ற ராயல் சொசைட்டியில் அவர் உறுப்பினராக சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

பட்டகம் (Prism) எனப்படும் முக்கோணத்தில் ஒளி விழும்போது ஏற்படும் விளைவுகளை அவர் கண்டறிந்தார். ஒரு பட்டகத்தின் (prism) ஊடே கதிரவனின் ஒளிக்கதிர் செல்லும்போது அது ஏழு வண்ணங்களாகப் பிரிவதைச் செய்முறையில் விளக்கினார். மேலும், பல வண்ணங்களைக் கொண்ட நியூடன் தகட்டைச் (Newton’s disc) சுழற்றும்போது அது வெண்மை நிறம் கொண்டதாக மாறுவதையும் செய்து காட்டினார். வண்ணங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்ய அவர் ஒரு கண்ணை மூடிக்கொண்டு மறு கண்ணால் சூரியனை பார்த்துக்கொண்டே இருந்தார். திடீரென்று வண்ணங்கள் மாறத்தொடங்கின. ஆனால் நியூட்டனுக்கு அந்த கண்ணில் பாதிப்பு ஏற்பட்டது. அதன் காரணமாக அவர் பல நாட்கள் இருட்டறையில் இருந்து கண்களின் முன் மிதந்த புள்ளிகளை அகற்ற வேண்டியிருந்தது. ஒளியின் இமிசன் கோட்பாடு நியூட்டன் வகுத்து தந்ததுதான். வெகுதொலைவில் உள்ள ஓர் ஒளிரும் பொருளிலிருந்து வெளியாகும் துகள்கள் பரவெளியில் வினாடிக்கு நூற்றி தொன்னூராயிரம் மைல் வேகத்தில் விரைந்து வருவதுதான் ஒளியாக நமக்குத் தெரிகிறது என்பதுதான் அந்தக்கோட்பாடு.

* எல்லாப் பொருள்களும் ஒன்றையொன்று ஈர்க்கும் தன்மையுடையன; அந்த ஈர்ப்பு விசை இரு பொருள்களுடைய நிறைகளின் பெருக்கலுக்கு நேர் விகிதத்திலும், அவ்விரு பொருள்களின் இடையே உள்ள தூரத்தின் வர்க்கத்திற்கு எதிர் விகிதத்திலும் இருக்கும்.

* ஒவ்வொரு வினைக்கும், அதற்கு எதிர்த் திசையிலிருந்து சமமான எதிர் வினை நிகழும்.

* ஒரு நிலையான பொருளை நகர்த்துவதற்கு, புற விசை இன்றியமையாதது.

'சர்' ஐசக் நியூட்டனின் மேற்கூறிய கோட்பாடுகளை அறியாத அறிவியல் மாணவர் எவரும் இருக்க முடியாது. அந்தளவுக்கு அறிவியலிலும், கணிதத்திலும் நியூட்டனின் பங்களிப்பு மகத்தானது. அறிவியல், கணிதம், இயந்திரவியல் துறைகளிலும், ஈர்ப்பு விசை பற்றியும் நியூட்டன் மேற்கொண்ட ஆய்வுகள் பெரிதும் போற்றப்பட்டன.

நியூட்டன் அறிவுச்செல்வத்தை சேர்த்து வைத்திருப்பதை உணர்ந்த அவரது நண்பர் ஹேய்லி அவற்றையெல்லாம் புத்தமாக வெளியிட நியூட்டனுக்கு ஊக்கமூட்டினார். அதன்பலனாக 1687 ஆம் ஆண்டு "Mathematical Principles of Natural Philosophy" என்ற புத்தகம் வெளியானது. "Principia" என்றும் அழைக்கப்பட்ட அந்த புத்தகம்தான் இதுவரை வெளியிடப்பட்டிருக்கும் அறிவியல் நூல்களிலேயே ஆகச்சிறந்ததாகக் கருதப்படுகிறது. 1692 ஆம் ஆண்டு முதல் 1694 ஆம் ஆண்டு வரை இரண்டு ஆண்டுகள் நியூட்டன் கடுமையான நோய்வாய்ப்பட்டார். அவருக்கு நரம்பு சம்பந்தமான பிரச்சினையும், தூக்கமின்மை பிரச்சினையும் ஏற்பட்டது. நியூட்டனுக்கு புத்தி பேதலித்து விட்டதாக வதந்திகள் பரவின. ஆனால் பின்னர் நன்கு குணமடைந்து பல்கலைக்கழகப் பணிகளில் ஈடுபட்டார்.

1703 ஆம் ஆண்டில் நியூட்டன் ராயல் சொசைட்டியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த 25 ஆண்டுகள் அவர் ஒவ்வொரு ஆண்டுமே தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது. 1705 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் ராணி (Queen Anne) கேம்ஃப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு வருகை மேற்கொண்டபோது நியூட்டனுக்கு 'சர்' பட்டம் வழங்கி சிறப்பித்தார். இங்கிலாந்தின் ஆகச் சிறந்த விஞ்ஞானியாக இன்றும் கருதப்படும் "சர் ஐசக் நியூட்டன்" நோய்வாய்ப்பட்டு 1727 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் தேதி இயற்கை எய்தினார். லண்டனில் புகழ்பெற்ற "Westminster Abbey"-யில் அடக்கம் செய்யப்பட்டார். மனு குலத்தின் மிகச் சிறந்த விலை மதிப்பில்லா மாணிக்கம் (The Best and Invaluable Gem of Mankind) என்று அவர் கல்லறையில் பொறிக்கப்பட்ட சொற்றொடர் ஆழ்ந்த பொருளுடையது.

நியூட்டனுக்கு பலர் அஞ்சலி செலுத்தினாலும் போப் எழுதிய அஞ்சலி மிக ஆழமானது...

"இயற்கையும் அதன் விதிகளும் இருளில் கிடந்தன, கடவுள்... நியூட்டன் பிறக்கட்டும் என்றார் ஒளி பிறந்தது"

இந்த வாசகம் நியூட்டன் பிறந்த அறையில் இன்றும் பொறிக்கப்பட்டிருக்கிறது!


பழமையான மதம். எனவே இந்து மதம்தான் மிகவும் தூய்மையானதாகவும், -அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும், மிகச் சிறந்த மதமாகவும் இருக்க வேண்டும். இல்லையா?

பழமையான மதம். எனவே இந்து மதம்தான் மிகவும் தூய்மையானதாகவும், -அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும், மிகச் சிறந்த மதமாகவும் இருக்க வேண்டும். இல்லையா?

டாக்டர்

ஜாஹிர் நாயக் அவர்களிடம் முஸ்லிம் அல்லாதவர்கள் ஆங்கிலத்தில் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதிலினை தமிழாக்கம் செய்து தந்திருக்கிறேன். படியுங்கள். பரப்புங்கள். அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரிய போதுமானவன் (முகநூல் வழியாக முஹம்மது மீராசாகிப்)

பதில்:

1. இஸ்லாமிய மார்க்கமே உலகில் உள்ள மார்க்கங்களில் பழமையானது.
இந்து மதம் உலகில் உள்ள மதங்களில் எல்லாம் பழமையான மதம் என்பது தவறான வாதம்.
இஸ்லாமிய மார்க்கம்தான் உலகில் உள்ள மார்க்கங்களில் எல்லாம் முதலாவதாக தோன்றியதும்,
பழமையானதும் ஆகும். இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய மார்க்கம்தான்
என்றும், அதனை தோற்றுவித்தது முஹம்மது நபி (ஸல்) அவர்கள்தான் என்றும் தவறான
கருத்தினை மக்கள் கொண்டுள்ளனர். இஸ்லாமிய மார்க்கம் உலகம் தோன்றிய நாள் முதலாய்
இருக்கிறது. ஆதி மனிதன் இப்பூமியில் காலடி பதித்த நாள் முதலாய் இஸ்லாமிய மார்க்கம்
இவ்வுலகில் தோன்றிய மார்க்கமாகும். இஸ்லாமிய மார்க்கத்தை தோற்றவித்தது முஹம்மது நபி
(ஸல்) அவர்கள் அல்ல. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வல்லோன் அல்லாஹ்வின் இறுதித் தூதர்
ஆவார்கள்.

2. பழமையான மதம்தான் மிகவும் தூய்மையானதாகவும், மிகச் சிறந்த மதமாகவும் இருக்க
வேண்டும் என்கிற அவசியமில்லை.

ஒரு மதம் பழமையானது என்பதால் மாத்திரம் அந்த மதம் ஒரு சிறந்த மதமாகவும், மிகவும்
தூய்மையானதாகவும் கருதப்பட வேண்டும் என்கிற அளவுகோல் சரியானது அல்ல. இந்த
அளவுகோல் எவ்வாறு இருக்கிறதென்றால், ஒரு சுத்தமான குவளையில் தற்போது நிரப்பப்பட்டிருக்கும்
சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை விட, மூன்று மாதங்களுக்கு முன்னால் பிடிக்கப்பட்டு, (வீட்டில்,
குளிர்சாதன பெட்டிக்கு வெளியில்) திறந்து வைக்கப்பட்ட தண்ணீர்தான் சுத்தமானது என்று ஒருவர்
சொல்வதை போன்று இருக்கிறது.

3. அதுபோல புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மதம்தான் மிகவும் தூய்மையானதாகவும், மிகச் சிறந்த
மதமாகவும் இருக்க வேண்டும் என்கிற அவசியமும் இல்லை.

அதுபோல ஒரு மதம் புதிதாக தோன்றியது என்கிற காரணத்தால் மாத்திரம் அந்த மதம் ஒரு சிறந்த
மதமாகவும், மிகவும் தூய்மையானதாகவும் கருதப்பட வேண்டும் என்கிற அளவுகோலும் சரியானது
அல்ல. மூன்று மாதங்களுக்கு முன்னால் வீட்டில் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு
பாட்டில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர், தற்போது பிடிக்கப்பட்ட கடல் தண்ணீரை விட சுத்தமானது
என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று.

4. ஒரு மதம் தூய்மையானதாகவும், சிறந்த மதமாகவும் இருக்க வேண்டும் எனில், இறைவனால்
அருளப்பட்ட அந்த மதத்தின் வேதங்களில், எந்தவித இடைச்செருகலோ, கூடுதலோ, குறைவோ
செய்யப்பட்டிருக்கக் கூடாது.

ஒரு மதம் தூய்மையானதாகவும், சிறந்த மதமாகவும் இருக்க வேண்டும் எனில், இறைவனால்
அருளப்பட்ட அந்த மதத்தின் வேதங்களில், எந்தவித இடைச்செருகலோ, கூடுதலோ, குறைவோ
செய்யப்பட்டிருக்கக் கூடாது. இறையுணர்வின் பிறப்பிடம், மற்றும் இறைக் கட்டளைகள்
இறைவனிடமிருந்து வந்ததாகத்தான் இருக்க வேண்டும். இன்றைக்கு உலகில் இருக்கும்
வேதங்களில் அருள்மறை குர்ஆன் மாத்திரம்தான் அது அருளப்பட்ட விதத்திலேயே (மனித
கரங்களால் எந்தவித மாறுதல்களும் செய்யப்படாமல்) பாதுகாக்கப் பட்டிருக்கிறது. மற்ற
மதங்களின் வேதங்கள் யாவும், கூட்டப்பட்டும், குறைக்கப்பட்டும், இடைச்செருகல்கள்
செருகப்பட்டும்தான் இருக்கிறது. அருள்மறை குர்ஆனை மனனம் செய்த லட்சக்கணக்கான
உலமாக்களின் மனப்பாட வடிவில் - அருள் மறை குர்ஆன் - அது அருளப்பட்ட வடிவில் - இன்றும்
பாதுகாக்கப்பட்டு உள்ளது. அத்தோடு, நபித்தோழர் உதுமான் (ரலி) அவர்கள் காலத்தில்
தொகுக்கப்பட்ட அருள்மறை குர்ஆனின் பிரதிகள், தற்போது தாஷ்கன்டில் உள்ள
அருங்காட்சியகத்திலும், துருக்கியின் உள்ள கொப்தாகி (முழுPவுயுமுஐ) அருங்காட்சியகத்திலும்
பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அந்த பிரதிகளோடு, நம்மிடம் உள்ள அருள்மறை குர்ஆனை
ஒப்பிட்டு பார்த்தால், ஒரு சிறிய மாற்றத்தையும் காணவே முடியாது.

அருள்மறை குர்ஆனை பாதுகாப்பதாக அல்லாஹ் கூறுகின்றான்:
'நிச்சயமாக நாம் தான் இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்: நிச்சயமாக நாமே அதன்
பாதுகாவலானகவும் இருக்கின்றோம்.' (யுட – ஞரசயn 9:15)

5. பழமையான மதம்தான் மிகச் சிறந்த மதமாகவும் இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை.
ஒரு மதம் சிறந்த மதமாக இருக்கிறது என்பதற்கு காரணம், அது பழமையான மதம் என்கிற
அளவுகோல் சரியானது அல்ல. 1998 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட டொயோட்டோ காரைவிட 19ஆம்
நூற்றாண்டில் தயாரிக்கப்பட்ட கார்தான் சிறந்த கார், ஏனென்றால் அது பழைய கார் என ஒரு
மனிதன் சொல்வது போன்றுதான் இதுவும். ஒரு சிறிய சாவியைக் கொண்டு காரை இயங்க
வைக்கும் புதிய முறையை விட, ஒரு பெரிய இரும்பு கம்பியால் திருகி காரை இயங்க வைக்கும்
பழைய முறை சிறந்தது என வாதிடுபவரை நாம் ஒரு முட்டாள் என்றுதான் கருதுவோம்.

6. அதுபோல புதிதாக தோன்றிய மதம்தான் மிகச் சிறந்த மதமாகவும் இருக்க வேண்டும் என்கிற
அவசியமும் இல்லை.

அதுபோல ஒரு மதம் சிறந்த மதமாக இருக்கிறது என்பதற்கு காரணம், அது புதிதாக தோன்றிய
மதம் என்கிற அளவுகோலும் சரியானது அல்ல. 1999 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட 500 ஊஊ
மாருதிகார், 1997 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட 5000 ஊஊ மெர்ஸிடிஸ் பென்ஸ் 500 ளுநுடு காரை விட
சிறந்தது என்று சொல்வது போன்றுதான் இதுவும். இரண்டு வாகனங்களில் சிறந்தது எது என்று
மதிப்பிட வெண்டுமெனில், வாகனங்களை பற்றிய முழு விபரங்களையும் அறிய வேண்டும்.
உதாரணத்திற்கு - வாகனங்களின் ஓடும் திறன், வாகனங்களின் பாதுகாப்புத் தன்மை, வாகனத்தில்
உள்ள இயந்திரம் இயங்கும் திறன், அவைகள் செல்லும் வேகம், அவைகளில் உள்ள வசதி போன்ற
வாகனங்களின் அனைத்து விபரங்களையும் ஒப்பிட வேண்டும். அவ்வாறு ஒப்பிட்டு பார்த்தால், 1997
ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட 500 ஊஊ மெர்ஸிடிஸ் பென்ஸ் 500 ளுநுடு கார், 1999 ஆம் ஆண்டு
தயாரிக்கப்பட்ட 500 ஊஊ மாருதிகாரை விட பன்மடங்கு சிறந்தது என்பது தெரிய வரும்.

7. மனித குலத்தின் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு தரும் மதமே, சிறந்த மதமாகும்.

இவ்வுலகில் வாழும் மனித குலத்தின் பிரச்னைகளுக்கு ஒரு மதம் தரும் நிரந்தர தீர்வுகள்தான்,
அந்த மதம் சிறந்த மதமாக கருதப்படக் கூடியதற்கு காரணமாக அமைய வேண்டும். எல்லா
காலங்களிலும் பின் பற்றக் கூடிய அளவிற்கு, அந்த மதம் உண்மையான மதமாக இருக்க வேண்டும்.
இவ்வுலகில் வாழும் மனித குலத்தின் பிரச்னைகளான மது மற்றும் போதைப் பொருள்கள், அதிக
சதவீத்தில் உள்ள பெண்கள், கொடுந்தொல்லைகள், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, இனவெறி,
சாதிப்பிரச்னை போன்ற அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வாக அமைந்துள்ளது இஸ்லாமிய மார்க்கம்
ஒன்றே.

இஸ்லாமிய மார்க்கம் உண்மையான மார்க்கம் ஆகும். அதன் சட்டங்களும், தீர்வுகளும், எல்லா
காலத்திற்கும் ஏற்புடையது. இன்று உலகில் உள்ள வேதங்களில் இஸ்லாமிய மார்க்கத்தின்
வேதமான அருள்மறை குர்ஆன்தான் இன்றுவரை அதன் தூய்மையையும், நம்பகத்தன்மையையும்
பாதுகாக்கப்பட்ட வேதமாக உள்ளது. அருள்மறை குர்ஆனின் நம்பகத்தன்மையும், தூய்மையும்
அருள்மறை குர்ஆன் இறை வேதம்தான் என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கிறது.
அத்துடன் எல்லா காலத்திற்கும் ஏற்ற வேதம் என்பதையும் நிரூபிக்கிறது. உதாரணத்திற்கு -
அருள்மறை குர்ஆன் - அது இறக்கியருளப்பட்ட காலத்திலிருந்த அற்புதங்களுக்கு சவாலாக
அமைந்தது. அது இறக்கியருளப்பட்ட காலத்திலிருந்த கவிதை, எழுத்தாற்றல் போன்ற
இலக்கியங்களுக்கும் சவலாக விளங்கியது. இன்றைய காலகட்டத்தில் அபரிமிதமான வளர்ச்சி
அடைந்துள்ள அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்திற்கும் அருள்மறை குர்ஆன் ஓர் சவலாக
அமைந்துள்ளது. அத்தோடு இஸ்லாமிய மார்க்கம் மனிதனால் உருவாக்கப்பட்டதல்ல.
இறைவனால் மனித சமுதாயத்திற்கு தரப்பபட்ட மார்க்கம்தான் இஸ்லாமிய மார்க்கம். இஸ்லாமிய
மார்க்கம் மாத்திரம்தான் அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய மார்க்கமும் ஆகும்.

பதுருதின் தியாப்ஜி குடும்பம் தான் இந்திய தேசிய கொடியே வடிவமைத்து


பதுருதின் தியாப்ஜி குடும்பம் தான் இந்திய தேசிய கொடியே வடிவமைத்து என்று நம்மில் எத்தனை பேருக்கு இது தெரியும் கண்டிப்பா இதை படித்து மறைக்க பட்டுகொண்டு இருக்கும் வரலாறை தெரிந்து கொள்ளுகள் தெரியாதவர்களுக்கு தெரிய படுத்துங்கள் !!!! ( மறுபதிப்பு )

பதுருதின் தியாப்ஜி லண்டனில் மெட்ரிக் படிப்பை முடித்து Middle Temple Barrister (வழக்ளறிஞர்)April 1867 தான் பணியே தொடர்ந்தார் பாம்பேயின் முதல் வழக்ளறிஞர்ராக திகழ்ந்த இவர் . பின்னர் மிகவும் புகழ் பெற்று விளங்கினர் . 1895 பாம்பே உயர்நிதி மன்றத்தில் நீதி பதியாக பணியாற்றினார் பின்பு 1902 இவரே முதல் இந்திய தலைமை நீதிபதியாக இருந்தார் மற்றும் பாரபட்சம் பார்க்காமல் தீர்ப்பு வழங்குவதில் கண்ணிய மிக்கவராக இருந்தார் .பல வருடகாலம் பொது வாழ்க்கையில் ஈடுபற்றார் இந்திய நேஷனல் காங்கிரஸின் முதல் முஸ்லிம் தலைவராக தேர்தெடுக்கப்பட்டார் . 1876 ajmuan i islam இயக்கம் மூலமாக அணைத்து முஸ்லிம் மக்களின் முனேற்றதிர்க்காகபாடுப்பட்டார் . இந்தியாவில் முஸ்லிம் மக்கள் அனைத்து மக்களுடனும் சகோதரதுடனும் சரி சமமாகும் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் .அரசியல் வாழ்கையில் நல்ல பெயரும் பெற்றார்

இவருடைய ஆளுமை திறனால் தான் முஸ்லிம்கள் அதிகமா இந்திய நேஷனல் காங்கிரசில் சேர்ந்தனர் என்று புகழாரம் சூற்றினர்
மகாத்மா காந்திஜி .அஹ்மத் கான் மற்றும் Badruddin Tyabji இந்திய நேஷனல் காங்கிரசுக்கு பெரும் பங்கு ஆற்றினர்.முஸ்லிம்விரோத
கொள்கைக்கு எதிராக இருந்தார் . இந்தியாவில் மத சார்ப்பற்ற அரசியல் வர விரும்பினார் .அவருடைய மனைவி தான் முதல் சுதந்திர இந்தியாவில் தேசிய கொடியே வடிவமைத்தார் . அவர்களின் குடும்பமே சமுதயதிர்க்கும் கல்விக்கும் இந்திய விடுதலைக்கும் பெரும் பங்கு ஆற்றினார்கள்

ஆனால் தேசிய கொடியே ஒரு முஸ்லிம் தான் வடிவமைத்தார் என்பதற்காக பல இந்துத்துவ அமைப்புகள் அவர்களுடைய அலுவலங்கள் மற்றும் பொது இடங்களில் இந்திய தேசிய கொடியே பயன் படுத்துவதே இல்லை , அவர்கள் அவர்களின் காவி கொடியே தான் ஏற்றுவார்கள் . ஆனால் டெல்லி செங்கோட்டையில் தான் பிரதமர் கொடியே ஏற்றுகிறார்.அப்போ அந்த கட்டிடம் யார் கட்டியது என்று அவர்கள் சிந்திக்கவில்லை . அதை ஷாஜகான் தான் கட்டினர் என்று மறந்து விட்டனர் .அதனால் அவர்களுக்கு நாம் நியாபகம் காட்டவேண்டும் அது நமது கடமை அல்லவா ?????????

ஆண்கள் ஏன் தங்கம் அணியக்கூடாது கூடாது?



தங்கம் ஆண்கள் அணியலாம ? அணியக்கூடாத ? என்று கேள்வி கேட்டு இருந்தோம் சிலர் தங்கம் அணியலாம் சிலர் அணிய கூடாது என்று சொல்லி இருந்தார்கள் ஏன் நாம் தங்கம் அணியக்கூடாது என்று சொல்லுகிறார்கள் ?

பொதுவாக பெண்களே தங்கம் என்ற உலோகத்தை அணிகலனான அணிந்து கொள்ளுகிறார்கள் . ஆனால் ஆண்கள் அதனை அணிவத அணியக்கூடாத ? என்று தான் இங்கு கேள்வி . இதைப் பற்றி சில அறிஞர்கள் அனுபவ ரீதியிலான தங்கம் அணியக்கூடாது என்று தங்கள் கருத்துக்களை தெளிவுபடுத்தியுள்ளார்கள். இஸ்லாம் மார்கத்திலும் ஆண்கள் தங்கம் அணிவது தடை செய்ய பட்டு உள்ளது

அதாவது தங்கம் எனும் உலோகம் வெப்பத்தை விரைவில் வெளியேற்றக் கூடியது என்று சோதனைகள் மூலம் நிரூபணமாகியுள்ளது. உலகில் உள்ள உலோகங்களை நெருப்பில் பழுக்கக் காய்ச்சி தண்ணீரில் போட்டு உடனே வெளியே எடுத்தால் அதில் உள்ள வெப்பம் முழுமையாக வெளியேறாமல் அது சிறிது நேரம் சூடாகவே இருக்கும். அதிக நேரம் சென்ற பிறகு தான் அதன் வெப்பம் தணியும்.

ஆனால் தங்கத்தைச் சூடேற்றி அதைத் தண்ணீரில் போட்டு உடனே வெளியே எடுத்தால் அதன் வெப்பம் முழுமையாக வெளியேறி இருக்கும்.

இந்தச் சோதனை அடிப்படையில் ஆண்கள் தங்கம் அணியும் போது அவர்களின் உடலில் உள்ள வெப்பம் வேகமாக வெளியேற்றப்படும். ஓரளவு சூடாக இருக்க வேண்டிய ஆணகளின் உடல் சூட்டை அதிகம் இழக்க வேண்டிய நிலை ஏற்படும். இது தாம்பத்தியத்தையும் பாதிக்கும்.

தாம்பத்திய உறவுக்கு ஆண்களின் உடல் ஓரளவுக்கேனும் சூடாக இருக்க வேண்டும். அப்போதுதான் அதன் சரியான இன்பத்தை அடைந்து கொள்ள முடியும்.

ஆனால் பெண்களின் உடல் ஆண்களின் உடலை விடக் குளிர்ச்சியாக இருந்தால் தான் அவர்களிடம் அழகு மிளிரும். அவர்கள் தங்கம் அணிவதால் அது அவர்களுக்கு நன்மை பயக்கும்.

மறைவானவற்றின் திறவுகோல்கள் ஐந்தாகும்.


‎"இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'

மறைவானவற்றின் திறவுகோல்கள் ஐந்தாகும். அவற்றை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள்.

1. (பெண்களின்) கருவறைகளில் ஏற்படும் குறைவை(யும் கூடுதலையும்) அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள்.

2. நாளை என்ன நடக்கும் என்பதை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள்.

3. மழை எப்போது வரும் என்பதையும் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் (உறுதியாக) அறியமாட்டார்கள்.

4. எந்த உயிரும் தான் எந்த இடத்தில் இறக்கும் என்பதை அறியாது; அல்லாஹ் தான் அதை அறிவான்.

5. மறுமைநாள் எப்போது வரும் என்பது அல்லாஹ்வைத் தவிர வேறெவருக்கும் தெரியாது.

என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

ஸஹீஹுல் புகாரி 7379

Tuesday, May 29, 2012

விவாகரத்தில் முதல் 10 இடத்தை பெற்ற நாடுகள்!


சமீபத்திய இந்த செய்தியை பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். 30 சதவீதம் 40 சதவீதம் சில நாடுகள் 50 சதவீதம் விவாகரத்தால் அவதிப்படும் நாடுகளாக உள்ளது கவலை தரும் விஷயம். இதனால் மனதால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எதிர்காலம் என்ன ஆவது? ஒன்றுபட்ட கூட்டு குடும்பம் சிதைந்து மனிதர்களை நேசிக்கும் மனோபாவமும் குறைந்து விட்டது. நானும் சம்பாதிக்கிறேன்: நீயும் சம்பாதிக்கிறாய். உனக்கு நான் ஏன் கட்டுப்பட வேண்டும். உன் பேச்சை நான் எதற்கு கேட்க வேண்டும் என்ற ஈகோ தான் இன்று உலகின் பல குடும்பங்களை பிடித்து ஆட்டுகிறது.

-------------------------------------------



'இனி உன் பேரு மலர்விழி இல்லே! கூகுள்'

'என் பேரை எதுக்கு மாத்துரீங்க!'

'நான் எங்கே போனாலும் கண்டுபிடிச்சுடுரியே! அதான்.'

------------------------------------------

கணவன்:- என்னடி இது பெட்ஷீட் கனத்துல புடவை எடுத்து இருக்கே
மனைவி:- கட்டிக்க போறது நாந்தானே
கணவன்:- அதை துவைக்கிறது நான்தானே! எனக்குல்லே வலி தெரியும?

------------------------------------------


முதல் இடம் ரஷ்யா:
லெனினும் ஸ்டாலின் தங்களின் கனவு தேசமாக உருவாக்கிய ரஷ்யாதான் இன்று குடும்பங்களில் நடக்கும் விவாகரத்தில் உலகின் முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. 5.30 சதவீத மக்கள் ரஷ்யாவில் விவாகரத்துப் பெற்றுக் கொள்கின்றனர். மேற்கத்திய கலாசாரமும் நாத்திகமும் இதற்கான முக்கிய காரணங்களாக விளங்குகின்றன. ஊழலால் விளைந்த பொருளாதார தேக்க நிலையும் மக்களை தனியாக பிரிந்து செல்ல தூண்டுகிறது.



இரண்டாவது இடம் அருபா:

கரிபியன் பகுதியைச் சேர்ந்த அரூபா என்ற இந்த தீவு விவாகரத்தில் உலகின் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. 5.27 சதவீத மக்கள் இங்கு விவாகரத்தைப் பெற்றுக் கொள்கிறார்களாம். வறுமை இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

மூன்றாம் இடம் அமெரிக்கா:

நம்ம பெரியண்ணன் அமெரிக்கா விவாகரத்தில் மூன்றாவது இடத்தில் இருக்காக! :-) அண்ணாச்சி 4.19 சதவீதம் பெற்று சிறந்த இடத்தை பிடித்துள்ளார். இன்னும் சில ஆண்டுகளில் முதல் இடத்தை பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தனது மக்களுக்கு நிம்மதியான வாழ்வை தர லாயக்கற்ற அரசு உலகைக் கட்டுப்படுத்தப் போகிறதாம். மக்களின் மன நிம்மதியின்மையே விவாகரத்துக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.



நான்காவது இடம் பனாமாவுக்கு:

நான்காவது இடத்தை பெற்றுள்ள பனாமா பெற்ற புள்ளி விபரம் 3.80. கிட்டத்தட்ட அமெரிக்காவை நெருங்கி வருகிறது. முன்பெல்லாம் இது போன்ற விவாகரத்துக்கெல்லாம் சர்ச் அனுமதி கொடுப்பதில்லை. கலாசார மாற்றங்களின் விளைவாக இன்று மிகப்பெறும் அச்சுறுத்தலாக விவாகரத்து இந்நாட்டை உலுக்கி எடுக்கிறது.

ஐந்தாவது இடம் உக்ரைனுக்கு:

ஐந்தாவது இடத்தில் உள்ள உக்ரைன் பெற்ற புள்ளி விபரங்கள் 3.79. ரஷ்யாவோடு ஒன்றாக இருந்த போது குடும்பங்களும் ஓரளவு ஒன்றாக இருந்தன. ரஷ்ய குடியரசிலிருந்து பிரிந்தவுடன் மேற்கத்திய கலாசாரம் இங்கும் குடும்பங்களை பிரித்து விட காரணமாகிறது. பல பெற்றோர்கள் குழந்தை பெறுவதையே தவிர்க்கின்றனர். அதற்கு காரணமாக நாட்டின் பொருளாதாரத்தைச் சுட்டிக் காட்டுகின்றனர். குழந்தை பிறக்காததும் விவாகரத்துக்கு முக்கிய காரணமாக அமைகிறது.

ஆறாவது இடத்தில் இருப்பது பெலாருஸ்:

ரஷ்ய குடியரசுக்கு உட்பட்ட பெலாருஸ் நாடு ஆறாவது இடத்தைப் பெற்றுள்ளது. பொருளாதார தேக்கமும் மேற்கத்திய கலாசாரம் இந்நாட்டில் புகுந்ததும் இதற்கு முக்கிய காரணமாகிறது.

ஏழாவது இடத்தில் இருப்பது மால்டோவா:

பொருளாதார தேக்க நிலையும் மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டதும் காரணமாக சொல்லப்படுகிறது.

எட்டாவது இடம் கியூபாவுக்கு:

கியூபாவில் நடக்கும் விவாகரத்தின் சதவீதம் 3.16 ஆக உள்ளது. இங்கு திருமணத்தை தங்களின் பொரளாதாரத்தை உயர்த்திக் கொள்ளும் ஒரு மார்க்கமாகப் பார்க்கின்றனர். பல மொழிகள் கலந்திருப்பதும் இது போன்ற விவாகரத்துகள் அதிகரிக்க காரணமாகின்றன.

ஒன்பதாவது இடம் செக்கோஸ்லோவாகியா:

விவாகரத்துகள் 3.11 சதவீதம் நடந்து உலகின் ஒன்பதாவது இடத்தைப் பெற்றுள்ளது.

பத்தாவது இடத்தில் இருப்பது தென் கொரியா:

சுனு என்ற தென் கொரியாவின் திருமண வரன் தேடும் ஏஜன்சியின் தலைவர் நியூயார்க் டைம்ஸூக்கு பேட்டி கொடுக்கும் போது சொன்னதாவது: 'இதற்கு முன்பு இவ்வாறான மோசமான நிலை ஏற்பட்டதில்லை. வருடா வருடம் விவாகரத்துகள் அதிகமாகிக் கொண்டே வருகின்றன. எங்களுக்கென்று தனி பாரம்பரிய பெருமை உண்டு. அதை நாங்கள் இழந்து வருகிறோம்' என்கிறார்.

நம் பாரத நாட்டிற்கென்று தனிப் பாரம்பரியம் பெருமை உண்டு. ஆனால் மேற்கத்திய மோகத்தால் அதனை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறோம். ஆங்கில மொழி மோகமும் ஆங்கில கலாசாரத்தை சுவீகரித்துக் கொள்வதிலும் மேற்கண்ட நாடுகளோடு போட்டி போடுகிறோம். நமது நாட்டிலும் விவாகரத்து தினம் தினம் அதிகரித்து வருவது கவலைக்குரிய விஷயம்.

இதில் மற்றொரு ஆச்சரியமான விஷயம் இஸ்லாமியர்கள் தலாக் தலாக் தலாக் என்று அநியாயத்துக்கு பெண்களை விவாகரத்து பண்ணி கொடுமைபடுத்துகிறார்கள் என்று கூறுவோர் உண்டு. அதிசயமாக இந்த பட்டியலில் ஒரு முஸ்லிம் நாடு கூட வராததை பார்த்து ஆச்சரியப்பட்டேன். விவாகரத்தை சிரமாக்கிய ஒரு சமூகம் சதவீதத்தில் அதிகமாக இருக்கிறது. விவாகரத்தை மிக இலகுவாக்கிய இஸ்லாமியர்களிடம் விவாகரத்து குறைந்துள்ளதை இந்த நேரத்தில் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

http://www.siliconindia.com/news/general/10-Countries-With-the-Highest-Divorce-Rates-nid-117138-cid-1.html


--------------------------------------------------------------------------

(இத்தகைய) தலாக் இரண்டு முறைகள் தாம் பின் (தவணைக்குள்)முறைப்படி கணவன், மனைவியாகச் சேர்ந்து வாழலாம் அல்லது நேர்மையான முறையில் பிரிந்து போக விட்டுவிடலாம் அவ்விருவரும் இறைவனின் வரம்புகளை நிலை நிறுத்த முடியாது என்று அஞ்சும் போது தவிர. நீங்கள் மனைவியருக்கு கொடுத்தவற்றிலிருந்து யாதொன்றையும் திருப்பி எடுத்துக் கொள்ளுதல் கூடாது - இன்னும் நீங்கள் இறைவனின் வரம்புகளை அவர்களால் நிலை நிறுத்த முடியாது என்று அஞ்சினால், அவள் (கணவனுக்கு) ஏதேனும் ஈடாகக் கொடுத்து(ப் பிரிந்து) விடுவதில் குற்றமில்லை. இவை இறைவன் ஏற்படுத்தியுள்ள வரையறைகளாகும். ஆகையால் அவற்றை மீறாதீர்கள். எவர் இறைவனின் வரையறைகளை மீறுகிறார்களோ, அவர்கள் அக்கிரமக்காரர்கள் ஆவார்கள்.
-குர்ஆன் (2:229)

மீட்ட முடியாதபடி (அதாவது இரண்டு தடவை தலாக் சொன்ன பின்னர் மூன்றாம்) தலாக் சொல்லிவிட்டால் கணவன் அப்பெண்ணை மறுமணம் செய்து கொள்ள முடியாது. ஆனால் அவள் வேறு ஒருவனை மணந்து அவனும் அவளை தலாக் சொன்னால் அதன் பின் (முதற்) கணவன் மனைவி சேர்ந்து வாழ நாடினால் - அதன் மூலம் இறைவனின் வரம்புகளை நிலைநிறுத்த முடியும் என்று எண்ணினால், அவர்கள் இருவரும் (மறுமணம் செய்து கொண்டு மணவாழ்வில்) மீள்வது குற்றமல்ல. இவை இறைவனின் வரையறைகளாகும்டி இவற்றை அல்லாஹ் புரிந்து கொள்ளக்கூடிய மக்களுக்குத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறான்.
-குர்ஆன்(2:230)

இன்னும், பெண்களை நீங்கள் தலாக் செய்து, அவர்களும் தங்களுடைய இத்தா தவணையைப் பூர்த்தி செய்து விட்டால், அவர்கள் தாங்கள் விரும்பி ஏற்கும் கணவர்களை முறைப்படித் திருமணம் செய்து கொள்வதைத் தடுக்காதீர்கள். உங்களில் யார் இறைவனின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளார்களோ, அவர்களுக்கு இதைக் கொண்டு உபதேசிக்கப்படுகிறது. இ(தன்படி நடப்ப)து உங்களுக்கு நற்பண்பும், தூய்மையும் ஆகும் (இதன் நலன்களை) இறைவன் அறிவான் நீங்கள் அறிய மாட்டீர்கள்.
-குர்ஆன்(2:232)


ஆம் முஸ்லிம்களிடம் விவாகரத்தின் சதவீதம் குறைவாக இருக்க காரணம் அவர்களிடம் உள்ள இறைபக்தி என்றால் மிகையாகாது. அநியாயமாக ஒரு பெண்ணை தலாக் சொன்னால் அதன் பலனை மறுமையில் தண்டனையாக பெறுவான்: அதே போல் மனைவியும் பெறுவாள் என்று பெரும்பாலான முஸ்லிம்கள் மறுமையை நம்புவதும் மேற்கத்திய கலாசாரத்துக்கு அடிமையாகாமல் இருப்பதும் கூட காரணமாக இருக்கலாம்.

லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!



உண்ணும் உணவை காலதாமதமாக உட்கொண்டால் உடலில் கொழுப்பு சத்து அதிகமாகிவிடும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். சரியான நேரத்தில் உணவு உட்கொண்டால் மட்டுமே கொழுப்பு சத்துக்கள் எரிக்கப்படும் என்கின்றனர் நிபுணர்கள்.

சாப்பிட வாப்பா, சாப்பிட வா என்று அம்மா கெஞ்சிக்கொண்டே இருந்தாலும் காதில் வாங்காமல் இண்டர் நெட், தொலைக்காட்சி என எதிலாவது மூழ்கிப்போய்விடுகிறீர்களா? இது தவறான செயல். நேரத்திற்கு சாப்பிடாமல் இரவில் நேரங்கெட்ட நேரத்தில் சாப்பிடுவது உடல் பருமனுக்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.

கொழுப்பு அதிகம் உள்ள உணவு பொருட்களை சாப்பிட்டால் உடலில் கொழுப்பு சத்து ஏற்படும் என்பதில்லை உண்ணும் உணவை தாமதமாக சாப்பிட்டாலே உடம்பில் கொழுப்பு தங்கி உடல் பருமனாகிவிடும் எனவே உணவை சரியான நேரத்திற்கு சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக இதை அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சால்க் இன்ஸ்டிடியூட்டில் பணிபுரியும் இந்திய ஆராய்ச்சியாளர் டாக்டர் சச்சிதானந்தா பாண்டே தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

எலிகளிடம் மேற்கொண்ட ஆய்வில் அவற்றுக்கு தாமதமாக தீனி போட்டு சாப்பிட வைத்தனர். அவ்வாறு உணவு தின்ற எலிகளுக்கு கொழும்பு சத்து அதிகரித்து இருந்தது. அதே போன்றுதான் தாமதமாக சாப்பிடும் மனிதர்களின் உடலிலும் கொழுப்பு சத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சரியான நேரத்துக்கு உணவு சாப்பிடவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஓரு குறிப்பிட்ட நேரத்தில்தான் கல்லீரல் மற்றும் குடல் உறுப்புகள் வேகமாக வேலை செய்யும். மற்ற நேரங்களில் அவை அமைதியாக தூக்க நிலையில் இருக்கும். எனவே, அப்போது சாப்பிடும் போது உணவில் இருக்கும் கொழுப்பு சத்து எரிக்கப்படாமல் அப்படியே உடலில் சேர்ந்து விடுகிறது இதனால் இளம் தலைமுறையினருக்கு உடல் பருமன் ஏற்படுவது தவிர்க்க முடியாமல் போய்விடுகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

எனவே இனிமே சாப்பிடற சாப்பாட்டை சரியான நேரத்துக்கு சாப்பிடுங்க சரியா?

அசத்தும் எகிப்திய மாணவி..


19-year-old girl in Egypt invents a spacecraft propulsiondevice

‎19-year-old girl in Egypt invents a spacecraft propulsiondevice
18th May 2012 by Galgallo Duba Fayo
A 19-year-old Egyptian universitystudent called Aisha Mustafa has invented a propulsion device intended to offer spacecrafts a new method and cheaper means of energy consumption.
The propulsion device promises chances of using quantum physics and chemical reactions in artificial satellites, instead...... of the current radioactive-based jets and ordinary rocket engines.
Mustafa’s device is based on a scientific mix between quantum physics , space technology, chemical reactions and electrical sciences.
Mustafa said the inventions generates energy for space vehicles from electric energy formed by Casimir-polder force, which occurs between separate surfaces and objects in a vacuum and by the zero-point energy considered as the loweststate of energy.
The device uses reflective panels for additional force which resembles photovoltaic solar cells.
At present, artificial satellites, spacecrafts and space vehicles depend on rocket gas engines that use forced gas at a supersonic speed, or chemical reactions rockets propelled by solid or liquid fuels such as radionuclide or petroleum. Others use electrically propelled probes, which depend on thrusting force via accelerating ions.
The physics student at Sohag University told EGYNews agency she has patented the device with Egyptian Academy of scientific Research and Technology (ASRT).
The invention is related to a hypothetical concept of a jet propulsion called “Differential Sail”, theoretically created by NASA’s retired professor Marc G. Millis — who led NASA breakthrough propulsion physics project. Dr. Ahmed Fikry, Mustafa’s supervisor, said the invention would be highly beneficial in several fields and areas of industries once adopted.
The 19-year-old says she aims attesting her invention at major scientific research organisationshence the possibility of applying it in upcoming space missions.
The new invention, analysts say, is expected to make space travels, easier, cheaper and faster in future.
This story originally appeared on HumanIPO .

Sunday, May 27, 2012

ஜூலியஸ் சீசர் வரலாற்று நாயகர் !!




உலக வரலாற்றை எத்தனையோ சாம்ராஜ்யங்கள் அலங்கரித்திருக்கின்றன. அதில் சில சாம்ராஜ்யங்கள் பல நூற்றாண்டுகள் செழித்து வளர்ந்திருக்கின்றன. பல சாம்ராஜ்யங்கள் தோன்றிய வேகத்திலயே மறைந்து போயிருக்கின்றன. எந்த சாம்ராஜ்யத்தின் தலையெழுத்தையும் நிர்ணயிப்பது அதனை வழிநடத்தும் தலமையத்துவம்தான். வீரத்தையும், விவேகத்தையும் முதலீடாகக் கொண்டு நல்லாட்சி நடத்திய மாமன்னர்களை வரலாறு பெருமையோடு சுமந்து நிற்கிறது. வீரத்தையும், அடாவடித்தனத்தையும் முதலீடாக் கொண்டு கொடுங்கோலாட்சி கொடுத்த கொடியவர்களை அதே வரலாறு நாம் மறக்க வேண்டுமென்பதற்காக நினைவில் வைத்திருக்கிறது. பல நல்லாட்சிகள் தந்து உலக அரசியலுக்கு பல வழிகளில் முன்னுதாரணமாக விளங்கிய ஒரு சாம்ராஜ்யம் ரோம சாம்ராஜ்யம். அந்த சாம்ராஜ்யத்தின் பெருமைக்குப் பலர் வித்திட்டிருந்தாலும் ஒருவரின் பெயரை இன்றும் வரலாறு மதிக்கிறது. இலக்கியம் துதிக்கிறது.

அவர்தான் ஆங்கில இலக்கிய மேதை 'மகாகவி' ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற நாடகம் ஒன்றின் கதாநாயகனும், நம்பிக்கை துரோகத்திற்க்குப் பலியானவர்களுக்கு சிறந்த உதாரணமாக இருப்பவரும், காலண்டர் சீர்சிருத்தம் செய்து நாம் இன்று பயன்படுத்தும் நவீன நாட்காட்டி முறையை உலகுக்குத் தந்தவருமான 'ஜூலியஸ் சீசர்'. கி.மு நூறாம் ஆண்டு ஜூலை 13 ஆம் தேதி ரோமில் பிறந்தார் ஜூலியஸ் சீசர். அவர் பிறந்த காலகட்டம் ரோமில் அரசியல் கொந்தளிப்பு நிறைந்த ஒரு காலகட்டம். கிமு இரண்டாம் நூற்றாண்டில் இரண்டாம் பியூனிக் போரில் வெற்றி பெற்ற ரோமானியர்கள் தங்களது சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தத் தொடங்கினர். தங்கள் படைப்பலத்தைக் கொண்டு பல பகுதிகளை கைப்பற்றியதால் ரோமில் செல்வம் கொழிக்கத் தொடங்கியது. ஆனால் ரோமானிய ஆட்சிப்பேரவையால் மிகப்பெரிய ரோமானிய சாம்ராஜ்யத்தை முறையாக ஆள முடியவில்லை.

அரசியலில் ஊழல் தலை விரித்தாடியது. அரசியல்வாதிகளும், கிளர்ச்சித்தலைவர்களும், அதிகாரத்தைக் கைப்பற்றப் போராடினர். அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் ரோமில் மக்காளாட்சி செழிக்க முடியாது என்று கருதிய மிக முக்கியமான அரசியல் தலைவர்தான் ஜூலியஸ் சீசர். சிறுவயதில் சிறந்த கல்வி கற்கும் வாய்ப்பைப் பெற்ற சீசர் மிக இளம்வயதிலேயே அரசியலில் நாட்டம் கொண்டார். பல்வேறு பதவிகளை வகித்த பிறகு கிமு 58 ஆம் ஆண்டில் அவருக்கு 42 வயதானபோது ரோமின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த மூன்று அந்நிய மாநிலங்களுக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டார். அந்த மாநிலங்கள் Cisalpine Gaul என்று அழைக்கப்பட்ட வடக்கு இத்தாலி, Illyricum என்று அழைக்கப்பட்ட யூகோஸ்லாவியாவின் கரையோரப்பகுதி, மற்றும் Transalpine Gaul என்று அழைக்கப்பட்ட தெற்கு பிரான்ஸ் ஆகியவை அந்த மூன்று மாநிலங்களையும் ஆளும் பொறுப்பேற்றுக் கொண்ட சீசரிடம் இருபதாயிரம் வீரர்கள் கொண்ட இராணுவப்படை இருந்தது.

அந்தப்படையைக் கொண்டு அடுத்த ஏழு ஆண்டுகளில் 'Gaul' என்று அழைக்கப்படும் நிலப்பரப்பு முழுவதையும், ஒவ்வொன்றாக கைப்பற்றி ரோமின் ஆளுமைக்குக் கீழ் கொண்டு வந்தார் சீசர். அப்போதிய 'Gaul' பகுதி என்பவை தற்போதைய பிரான்ஸ், பெல்ஜியம், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, ஹாலந்து ஆகியவை அடங்கிய பகுதிகளாகும். இருபதாயிரம் வீரர்கள் என்பது மிகக்குறைவு என்றாலும் வீரத்தோடும், விவேகத்தோடும் தனது படைகளை சிறப்பாக வழிநடத்தி அவ்வுளவு பெரிய நிலப்பரப்பைக் கைப்பற்றினார் சீசர். Gaul பகுதியைக் கைப்பற்றியதால் சீசரின் புகழ் ரோம் முழுவதும் பரவத் தொடங்கியது. அவரை மிகப்பெரிய கதாநாயகர்களாகப் பார்க்கத் தொடங்கினர் ரோமானியர்கள். ஆனால் அவரது பலத்தையும், பிரபலத்தையும் பொறுத்துக்கொள்ள முடியாத ரோம் ஆட்சிப் பேரவை ஒரு விசித்திரமான கட்டளையைப் பிறப்பித்தது. படைவீரர்களை அப்படியே விட்டுவிட்டு ஒரு சாதாரண குடிமகனாக சீசர் ரோமுக்கு வரவேண்டும் என்று ஆணையிட்டது.

தனது வளர்ச்சியை சகித்துக்கொள்ள முடியாத அரசியல் எதிரிகள் தன்னை அழிப்பதற்காகத்தான் அவ்வாறு வரச்சொல்கின்றனர் என்று நம்பிய சீசர் ஆட்சிப்பேரவையின் ஆணையை தைரியமாக எதிர்த்து கி.மு 49 ஆம் ஆண்டு ஜனவரி 10,11 ஆம் தேதிகளில் தனது ஒட்டுமொத்த படையுடன் ரோம் திரும்பினார். அதனை சட்டவிரோதமான செயல் என்று சீறியது ஆட்சிப்பேரவை, சீசரோ அடிபணிவதாக இல்லை. எனவே ஆட்சிப்பேரவை படைகளுக்கும், சீசரின் படைகளுக்குமிடையே உள்நாட்டுப் போர் மூண்டது. நான்கு ஆண்டுகள் நீடித்த அந்தப்போரில் முழுமையாக வெற்றிப் பெற்று ரோமின் சர்வாதிகாரியானார் சீசர். அவர் போரில் வெற்றி பெற்ற தினம் கிமு 43 ஆம் ஆண்டு மார்ச் 7-ஆம் தேதி என்று வரலாறு குறித்து வைத்திருக்கிறது. ஆனால் ரோமின் சக்ரவர்த்தியாக அவரால் ஓர் ஆண்டுதான் நீடிக்க முடிந்தது.

தன் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள் என்று நம்பிய உறுப்பினர்களுடன் ஆட்சிப்பேரவை கூட்டம் ஒன்றில் கலந்துகொள்வதற்காக வந்தார் சீசர். அந்த தினம் கிமு 44 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் தேதி. அந்த நாளை 'Ides of March' என்று ஷேக்ஸ்பியர் குறிப்பிடுகிறார். மனத்தில் சதியையும், கைகளில் கத்திகளையும் மறைத்து அந்தக்கூட்டத்திற்கு வந்திருந்த உறுப்பினர்கள் சீசர் அரங்கத்தில் நுழைந்தபோது அவரை சரமாரியாக கத்தியால் குத்தினர். அந்தத் தாக்குதலை சற்றும் எதிர்பாராத சீசர் நிலைதடுமாறி தன் உயிர் நண்பன் புரூட்டஸை நோக்கி நகர்ந்தார். நண்பன் தன்னைக் காப்பாற்றுவான் என்று நம்பிய சீசரை தன் பங்குக்கு கத்தியால் குத்தினான் புரூட்டஸ். அப்போதுதான் "Et tu, Brutes?" ("You too, Brutus?") அதாவது நீயுமா புரூட்டஸ்? என்று தனது கடைசி வார்த்தையை உதிர்த்து தரையில் சரிந்து உயிர் நீத்தார் சீசர். குறைந்தது 23 தடவை அவர் கத்தியால் குத்தப்பட்டார் என்று ஒரு வரலாற்றுக்குறிப்பு கூறுகிறது. இது வெறும் கதையல்ல... வரலாற்று உண்மை!.

'ஜூலியஸ் சீசர்' என்ற தனது நாடக இலக்கியத்தில் இந்தச் சம்பவத்தை மிகவும் அழுத்தமாக விவரித்திருக்கிறார் ஷேக்ஸ்பியர். நம்பிக்கைத் துரோகச் செயலுக்கு இந்த வரலாற்று சம்பவம் இன்றும் எடுத்துக்காட்டாக சொல்லப்படுகிறது. ரோமை ஆண்ட அந்த ஓர் ஆண்டில் சீசர் பல சீர்திருத்தங்களுக்கு திட்டமிட்டார் என்று வரலாற்றுக்குறிப்புகள் கூறுகின்றன. இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவர்களையும், ஏழைகளையும் ஒழுங்காக குடி அமர்த்துவது, பல்வேறு தரப்பினருக்கு ரோம் குடியுரிமை வழங்குவது, எல்லா இத்தாலிய நகரங்களுக்கும் ஒரே மாதிரியான முனிசிபல் அரசாங்க முறையை அறிமுகப்படுத்துவது, புதிய கட்டடங்களை கட்டுவது, ரோமின் சட்டதிட்டங்களை முறைப்படுத்தி எழுதி வைப்பது என பல சீர்திருத்தங்களைச் செயல்படுத்த திட்டமிட்டுக் கொண்டிருந்தார். ஓராண்டிலேயே அவர் கொலை செய்யப்பட்டதால் அந்தத் திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் போயின. ஆனால் அவர் செய்த ஒரு சீர்திருத்தத்தின் பலனை இன்றும் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். அதுதான் காலண்டர் எனப்படும் நாட்காட்டி சீர்திருத்தம்.

ரோமின் சர்வாதிகாரியாக பதவியேற்ற அதே ஆண்டில் அதாவது கி.மு 45 ஆம் ஆண்டில் காலண்டர் முறையை மாற்றி அமைத்தார் சீசர். ஓர் ஆண்டுக்கு 365 நாட்கள் என்றும், நான்கு ஆண்டுக்கு ஒருமுறை பிப்வரி மாதத்தில் ஒரு நாளை கூடுதலாக சேர்த்து அதனை 'லீப்' ஆண்டு என்றும் அவர்தான் நிர்ணயம் செய்தார். அவர் அறிமுகப்படுத்திய சீர்திருத்தம் என்பதால்தான் அது அவரது பெயராலேயே 'ஜூலியன் காலண்டர்' என்று அழைக்கப்படுகிறது. சீசர் ஒரு தலைசிறந்த அரசியல்வாதி, துணிச்சலான படைத்தளபதி, மிகச்சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், 'Gaul' பகுதிகளை தான் கைப்பற்றிய அனுபவங்களை "De Bello Gallico" என்ற தலைப்பில் புத்தமாக எழுதினார். அது மிகச்சிறந்த லத்தீன் இலக்கியமாகக் கருதப்படுகிறது. மேலும் "I came, I saw, I Conquered" என்ற புகழ்பெற்ற சொற்றொடரை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அது ஜூலியஸ் சீசர் உதிர்த்த வசனம்தான். ஆசியா பகுதியை மிகத் துரிதமாக கைப்பற்றிய பிறகு அவர் கூறிய புகழ்பெற்ற வார்த்தைகள் அது.

சீசர் போரின்போது ஈவு இரக்கமில்லாமல் செயல்பட்டாலும், தன்னிடம் தோற்ற படைகளை மிகக் கெளரவமாக நடத்தினார் என்றுதான் வரலாறு கூறுகிறது. சீசர் என்ற பெயர் வரலாற்றில் மிக மரியாதைக்குரிய ஒன்று என்பதற்கு தற்காலச் சான்றுகள் இரண்டு உண்டு. ஜெர்மானிய அரச பட்டம் 'கைசர்' என்றும் ரஷ்ய அரச பட்டம் 'ஷா' என்றும் அழைக்கப்படுகிறது. கைசர், ஷா இரண்டுமே 'சீசர்' என்ற சொல்லில் இருந்து உருவான பட்டங்கள்தான். ஜூலியஸ் சீசரைப் பற்றி பேசாமல் ரோம சாம்ராஜ்யத்தைப்பற்றி பேசிவிட முடியாது. அந்த அளவுக்கு அதன் வரலாற்றில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் சீசர்.